Thursday, April 29, 2021

சந்தனக்காடு (பகுதி -2)

•சந்தனக்காடு (பகுதி -2) இத் தொடரில் நான் மிகவும் பார்த்து வியந்திருப்பது முன்னாள் பொலிஸ் டிஜிபி தேவாரத்தை அம்பலப்படுத்தியிருப்பதே. தேவாரத்தை திருவாசகம் என பெயர் மாற்றம் செய்திருந்தாலும் பார்ப்பவர்கள் அனைவரும் இலகுவில் இனங் கண்டு புரிந்துகொள்ளக்கூடிய வகையில் உள்ளது. தேவாரத்தை தைரியமாக அம்பலப்படுத்திய இயக்குனர் கௌதமன் அவர்களுக்கும் அதை ஒளிபரப்பிய மக்கள் தொலைக்காட்சியினருக்கும் பாராட்டுகள். இந்த தேவாரம்தான் தர்மபுரியில் நக்சலைட்டுகள் என்றுகூறி 40க்கு மேற்பட்ட மக்களை கொன்றவன். அதனால் இவனுக்கு தண்டனை வழங்குவதற்காக தோழர் தமிழரசன் இரண்டுமுறை சென்னை வந்தார். சென்னை விருகம்பாக்கத்தில் இவனுக்கு ஒரு பெண்ணுடன் இரகசிய பாலியல் தொடர்பு இருந்தது. இதையறிந்த தோழர் தமிழரசன் துப்பாக்கியுடன் வந்து காத்து நின்றார். ஆனால் தப்பி விட்டான். இந்த தேவாரம்தான் வேலுர் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு அப்பாவி ஈழ அகதிகளை சுட்டுக் கொன்றவன். இந்த தேவாரம்தான் வீரப்பனை தேடுவதாக கூறி பல அப்பாவி பெண்களை பாலியல் வல்லுறவு செய்தவன். பல அப்பாவி இளைஞர்களை போலி மோதலில் கொன்றவன். இதை இயக்குனர் கௌதமன் அவர்கள் ஆதாரங்களுடன் நன்கு அம்பலப்படுத்தியுள்ளார். இனி தேவாரம் மட்டுமல்ல தேவாரத்தின் குடும்பத்தில் ஒருவர்கூட தேவாரத்தின் பெயரை பெருமையுடன் உச்சரிக்க முடியாது.

No comments:

Post a Comment