Thursday, June 30, 2016

கௌதம் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தோழமையுடன் தெரிவித்த கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
தமிழ்நாடு திருச்சியில் இருக்கும் கௌதம் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தோழமையுடன் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
இந்தியா மீதான இலங்கை ஆக்கிரமிப்பு நூல்
பெரியாரின் கூற்றைப்போல் வரலாற்றில் இந்தியா என்ற நாடு இருந்ததில்லை இனி இருக்கபோவதுமில்லை….
இலங்கையை எந்த அளவு அரசியல் ரீதியாகவும்,பொருளாதார ரீதியாகவும்,ராணுவரீதியாகவும் அடிமைபடுத்தி ஆக்கிரமித்துள்ளது என்பதை புள்ளி விவரங்களுடனும்,கடந்தகால நிகழ்வுகளை வரிசை படுத்தி உண்மையை உரக்க சொல்லும் நூல்….
இந்தியா ஒரு காலனியாதிக்க சந்தை நாடு ..முதலாளிகளின் லாபத்திற்க்காக தன் சொந்த நாட்டு மக்களையே கொலை செய்த ,செய்து கொண்டு இருக்கின்ற ஒரு கொலைகார நாடு இது இலங்கை தமிழ் மக்களுக்கு என்றுமே உண்மையாக உதவியதுமில்லை,உதவபோவதுமில்லை என்பதை கூறுகிறது இது …..
அது மட்டும் இல்லாமல் இந்தியா என்கிற பேட்டை ரவுடி தன்னை ஒரு வல்லரசாக காட்ட வேண்டும் என்பதற்க்காக பூடான்,சிக்கிம்,பங்காளதேஷ்,சீனா,பாகிஸ்தான், போன்றவற்றை தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவர செய்த அட்டூழியங்களை பட்டியளிடுகிறது….
முக்கியமாக இலங்கையில் இந்தியா அமைதிப்படையை அனுப்பி இந்திய ராணுவம் ,சிங்கள ராணுவத்தை விட அதிகமான உயிர்களை கொன்று ,பெண்களை பாலியல் சித்திரவதை செய்து அட்டூழியம் செய்ததை சொல்கிறது….
மேலும் விடுதலைபுலிகளையும்,சில புரட்சி குழுக்களையும் அழிதொழிக்க இந்தியா முக்கிய பங்கு வகித்ததையும்,அதன் பின்னர் பல முதலாளிகள் இலங்கையில் உள் நுழைந்ததையும்,தமிழ் மக்களின் நிலத்தை பிடுங்கி இந்திய தரகு முதலாளிகளுக்கு கொடுத்தது,விமான நிலையம் அமைக்க மக்களை விரட்டியடித்தது,அனல் மின் திட்டம் அனைவரின் எதிர்ப்பையும் மீறி வன்முறையாக அங்கே வைத்தது,பின்னர் மீனவர் பிரச்சனையை சமரசம் காணாமல் பெரு முதலாளியின் லாபத்திற்க்காக அதை கண்டும் காணாமல் வேண்டுமெனே அட்டூழியம் செய்வது,இலங்கையில் கல்வி,மருத்துவம்,பொருளாதாரம் என அனைத்து வகையிலும் இந்திய தரகு முதலாளிகளின் துணையோடு அடிமை படுத்தி வைத்திருப்பது என்று அடுக்கி கொண்டே செல்லலாம்..
இத்ற்க்கெல்லாம் பிரதான எதிரி முதலாளித்துவ ஏகாதிபத்தியம்….என்ற உண்மையை மறைத்து இன வெறியை மட்டுமே முன்னிலைப்படுத்தி மற்ற விசயங்களை பற்றி பாமர மக்களை சிந்திக்க விடாமல் இலங்கையை தனது கட்டுக்குள் முழுவதுமாக கொண்டுவர செயல் பட்டு வருகிறது…..இரண்டு அரசுகளும்…..
இதை புரிந்து கொள்ள மார்க்சிய அரசியல் கண்ணோட்டம் தேவை…
இந்த சிறு வெளியீடு உண்மையான மனித நேயம் பொது அக்கறை உள்ள அனைவரும் படித்து….புரட்சி ஒன்றே தீர்வு….அது இலங்கை இந்தியாவின் பிடிவில் இருந்து தன்னை விடுவித்து கொள்வதானாலும் சரி …….காஷ்மீர்,மணிப்பூர்,நாகாலந்து,தமிழ்நாடு எதுவாயினும் சரி இந்திய என்னும் தரகு முதலாளியிடம் இருந்து தன்னை விடுவிக்க ஒரு பொதுவுடைமை புரட்சி மூலம் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் மூலமே தன்னை பாதுகாத்து கொள்ள முடியும் என்பதை விளக்குகிறது….
.இலங்கை மக்களின் கடந்தகால வீரம்மிக்க போரட்டத்தின் வழியே உண்மையான எதிரியை இனங்கண்டு முறியடிக்க உதவும் சிந்தனை ……..
இந்த சிறு வெளியீடு இலங்கையில் உள்ள அனைவரும் தமிழ்நாட்டு மக்களும்,உலகில் உள்ள தமிழ் மக்களும் கண்டிப்பாக படிக்கப்பட வேண்டிய நூல்
இலங்கை தமிழர்கள் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் தெரிந்து கொள்ளபட வேண்டிய நூல்
ஏனெனில் இந்தியாவின் கோர முகத்தை உணர்ந்து இந்தியா ஒரு போதும் உதவாது என்ற கருத்தை திண்ணமாக வலியுறுத்தும் நூல்…
இன்னும் பல அரிய கருத்துக்கள் உண்மைகள் அடங்கிய நூல்…..
இவை காலத்தின் கட்டாயம்….
இந்த நூலை எழுதி கொண்டுவந்ததற்க்காக மிக்க நன்றி பாலன் தோழர் அவர்களே…

No comments:

Post a Comment