Thursday, June 30, 2016

கீரன் சிதம்பரப்பிள்ளை அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
டென்மாhக் நாட்டில் இருக்கும் நண்பர் கீரன் சிதம்பரப்பிள்ளை அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு,
தோழர் பாலன் அவர்கள் எழுதிய "இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு "
புத்தகத்தை வாசிக்க கிடைத்ததில் மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.
என் இனத்தின் நிலையை நினைத்து வேதனையும் அடைகின்றேன்
முதலில் தோழர் பாலன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்
நாம் தேசம் விட்டு வாழ்ந்தாலும் எம் தேசத்தை மறவாது
எம் மக்கள் மீது திணிக்கப்படும் கொடுமைகளையும் அரசியல் தந்திரங்களையும்
ஆராய்ந்து அறிந்து அதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற பற்று பாராட்டுக்குரியது
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு புத்தகம் வியப்பை ஏற்படுத்தியது
ஒரு புத்தகத்தை வாசிக்கும் வேலை இடையில் சற்று சோர்வு ஏற்படுவது வளமை
ஆனால் இந்த நூல் சோர்வின்றி வியப்பையும் ஆச்சரியத்தையும் என் நாட்டின் இனத்தின் இன்றைய நிலையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற உச்சாகத்தை ஏற்படுத்தியது.
இலங்கை ஒரு தனி நாடாக தலை நிமிர்ந்து நிக்க வேண்டும் என்று அன்றைய அரசியல் வாதிகள் எண்ணியிருந்தால் 1954ம் ஆண்டு நடத்தப்படட பாண்டுங் மாநாட்டில் அன்றைய இலங்கை பிரதமராக இருந்த சேர் ஜோன் கொத்தலாவெல விடம் நேரு கேட்ட கேள்வியே போதுமானது விழிப்புணர்வுடன் செயல்பட்டு இருக்க ( தமிழ் அமைப்புக்களும்)
எம் இன விடுதலைக்காக அன்று ஆயுதம் ஏந்திய குழுக்கள் மத்தியில்
தோழர் தமிழரசன் தோழர் மனோகரன் தோழர் சண்முகதாசன் போன்றவர்களின் ஆலோசனைகள் எடுபடாது போனது கவலைக்குரிய விடயமாக உள்ளது.
பலாலி விமான நிலையமும் சம்பூர் அனல்மின் நிலையம் இவைகள் நல்லது தானே என்றெண்ணிய மனதிற்கு இதனால் மக்களுக்கு ஏற்படும் விளைவுகளையும் இந்திய அரசின் தந்திரங்களையும் வாசித்து அறிந்த போது வியப்பை ஏற்படுத்துகின்றது.
தற்போதைய தமிழின தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும்
ஜயா சம்மந்தன் மாவை சேனாதிராசா சுமந்திரன் செல்வம் அடைக்கலநாதன்
ஆகியோரின் கருத்துக்கள் இந்திய கை கூலி என்பதையும் தமிழினத்தின் துரோகிகள் என்பதையும் வெளிப்படுத்துகின்றது .
விவசாய நிலங்கள் தொடங்கி கல்வி மருத்துவம் என்று சகல வளங்களுக்குள்ளும் கால் பதித்து இருக்கும், இருக்க நினைக்கும் இந்தியாவையும் அதற்கு விலை போகும் எம் அரசில் தலைவர்களையும் ( தமிழன துரோகிகளையும்) எம் இனத்துக்கு அடையாளம் காட்டும் தோழர் பாலன் அவர்களின் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு புத்தகம் சகல தமிழ் அமைப்புக்களுக்கும் தமிழ் மன்றங்களுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கிடைக்க பெற்றால் மிகுந்த நன்மை எம் இனத்திற்கு கிடைக்க வாய்ப்புண்டு.
நன்றி தோழர் எம் இனத்தின் மீதுள்ள பற்றும் உங்கள் பணியும் தொடரட்டும்.
அன்புடன் சி. கீரன்

No comments:

Post a Comment