Thursday, June 30, 2016

Gajan Gambler என்பவர் எனது “இலங்கைமீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் பற்றி தெரிவித்துள்ள கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
லண்டனில் வசித்து வருபவரும,; “தமிழ் சொலிலாடிற்றி” அமைப்பின் செயற்பாட்டாளருமான Gajan Gambler என்பவர் எனது “இலங்கைமீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் பற்றி தெரிவித்துள்ள கருத்துகள்
.தோழர் பாலன் எழுதிய இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு என்னும் நூல், இந்திய ஏகாதிபத்திய அரசும், அதன் தரகு முதலாளிகளும் இணைந்து எவ்வாறெல்லாம் இலங்கையை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர் என்பதை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.
கடந்த காலம் முதல் இன்று வரை இந்தியாவின் முழுமுதல் நோக்கம் தெற்க்காசியா பிராந்தியத்தின் பேட்டை ரவுடியாக உருவாகுவதேயன்றி அயல் நாடுகளுடன் நல்லுறவை பேணி அவற்றின் உள் நாட்டுப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதல்ல என்பது புலனாகின்றது.
தமது அரசியல, ராணுவ, பொருளாதார செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கையை அடிமைப்படுத்தி அதன் மூலம் தமக்கு ஆதாயம் தேடும் இந்தியா ஒரு போதும் தமிழர் நலன்களுக்கு உதவி செய்யப்ப போவதில்லை.
தமது சொந்த இன மக்களான காஸ்மீர், மணிப்பூர் , நாகலாந்து ,அசாம் மக்களின் போராட்டங்களை நசுக்கும் இந்திய வல்லாதிக்க அரசு தமிழ் மக்களின் போராட்டங்களை அங்கீகரித்து அவர்களுக்கென்று ஒரு தேசம் உருவாக்குவதற்க்கு உதவ முன்வரும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பதை ஆதாரங்களோடு முன்வைக்கின்றார் ஆசிரியர்.
மேலும், தமிழர் முஸ்லிம் மற்றும் வேடுவ மக்களுக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தும் அனைத்து நடவடிக்களையும் இந்தியா இலங்கையின் ஆசியுடன் செய்து வருகின்றது.
சம்பூர் அனல் மின் நிலையம், பலாலி விமானம் நிலைய ஒப்பந்தம், கிழக்கு நிலங்கள்,கனிம வளங்கள் , எண்ணெய் வளங்கள் தாரை வார்த்துக் கொடுக்கப்படல், மோசடியான மின்சார ஒப்பந்தம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை புனரமைப்பு போன்றவற்றின் பின்னால் மறைந்துள்ள மோசடிகளை தகுந்த தரவுகளுடனும், புள்ளிவிபரங்களுடனும் சுட்டிக் காட்டுகின்றார்.
இதன்மூலம் இந்தியாவின் முக்கிய நோக்கம் இலங்கையின் வளங்களை சுரண்டி, தமது வர்த்தகத்தை விஸ்தரிப்பதே அன்றி தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது அல்ல என்பது புலனாகின்றது.
இந்திய ஏகாதிபத்திய அரசானது, ஆரம்ப கால போராட்ட குழுக்களுக்கு ஆயுதம் வழங்கியது முதல், முள்ளி வாய்க்கால் யுத்தத்திற்க்கு துணை புரிந்தது வரை அனைத்துமே, தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்தவேயன்றி தமிழ் மக்களிற்க்கு உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்க்காகவல்ல என்பதையும் தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்தியாவின் தலையீடு பற்றி மெளனம் சாதிக்கும், இந்தியாவின் செல்லப் பிள்ளைகளான சம்மந்தன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோரை ஏன் நம்பக்கூடாது என்பதையும்,அதற்க்கான காரணத்தையும் தெளிவாக தோலுரித்துக் காட்டுகின்றார் ஆசிரியர்.
ஆகவே, இனியும் இந்தியாவை நம்பிக் கொண்டிருக்காமல், புரட்சிகர மற்றும் உழைக்கும் மக்களின் நலன் சார்ந்து இயங்கும் அமைப்புகளின் துணை கொண்டு இலங்கை மீதான இந்திய ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் போராட முன்வரவேண்டும் என்ற மார்க்கசியா, லெனினிய பார்வையை முன்வைக்கின்றார் ஆசிரியர்.
இந்தியாவின் கேவலமான, கோர முகத்தை அறிய ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய மிக முக்கிய நூல் இதுவாகும்.

No comments:

Post a Comment