Thursday, June 30, 2016

ஜீவன் நவதோயம் அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
கொழும்பில் இருக்கும் நண்பர் ஜீவன் நவதோயம் அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு,
இந்தியா இலங்கை தமிழர்கள் மீது தாம் அளவு கடந்த கரிசனை வைத்திருப்பதாக உலகையும் தமிழ் நாட்டு தமிழர்களையும் நம்பவைத்து தனது பூகோள அரசியல் காய் நகர்த்தலுக்காக சிங்களவர்களையும் தமிழர்களையும் ஒரு பகடைக்காய்களாக வைத்து இந்தியா தனது நலன் சார்ந்த வேலைத் திட்டங்களை செய்துகொண்டு வருவதை மிக அருமையாக கூறி இந்தியாவின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளீர்கள்.
இந்தியா நம்மை கைவிடாது என்ற கருத்தை உடையவர்களுக்கு ''இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் சிறந்த தெளிவை கொடுக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
உங்களது ஆழமான சமூக அக்கறையுடைய சிந்தனைகளின் ஊடாக இதைப்போன்ற நல்ல பல படைப்புகளை தர வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment