Thursday, June 30, 2016

•தமிழ் மக்கள் போராடுகிறார்கள! தமிழ் தலைவர்கள் துரோகம் செய்கிறார்கள்!!

•தமிழ் மக்கள் போராடுகிறார்கள!
தமிழ் தலைவர்கள் துரோகம் செய்கிறார்கள்!!
தடைசெய்யப்பட்ட கிளாஸ்டர் கொத்துக் குண்டுகளை இலங்கை அரசு பயன்படுத்தியுள்ளது என்றும் இதனை விசாரிக்க வேண்டும் என்றும் லண்டன் கார்டியன் பத்திரிகை கோரியுள்ளது.
முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னையிலும் மதுரையிலும் தமிழக மக்கள் போராடுகிறார்கள்.
பல புலம்பெயர் நாடுகளில் இருந்து சென்ற பல நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்கள் ஜ.நா வாசலில் ஊர்வலம் போகிறார்கள்.
ஆனால் தமிழ் தலைவர்கள் மாவை சேனாதிராசாவும் சரவணபவனும் ஜனாதிபதியுடன் கேக் வெட்டி மகிழ்கிறார்கள்
சம்பந்தர் அய்யாவும் சுமந்திரனும் அரச தலைவர்களுடன் விருந்து உண்ணுகிறார்கள்
பாதர் இமானுவேல் அடிகளார் இலங்கை அமைச்சா மங்களவுடன்; கை குலுக்கி அறையில் இரகசியம் பேசுகிறார்.
இலங்கை அரசோ இவர்களைப் பயன்படுத்தி காலம் கடத்துகிறது. தமிழ் மக்களை மட்டுமல்ல உலகத்தையே ஏமாற்றுகிறது.
இந்த தமிழ் தலைவர்கள் பதவிக்காகவும் அற்ப சலுகைகளுக்காகவும் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள்
ஆம். இவர்கள் தெரிந்தே இத் தவறுகளை செய்கிறார்கள்!
இது மறக்க முடியாதது மட்டுமல்ல மன்னிக்கவும் முடியாதது!

No comments:

Post a Comment