Wednesday, June 22, 2016

இதுதான் இந்தியாவா?

•இதுதான் இந்தியாவா?
நேற்றைய தினம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு முஸ்லிம் இளைஞர் மாடு வியாபாரம் செய்தமைக்காக இந்து மத வெறியர்களால் தாக்கப்பட்டுள்ளார். அதனை அவர்கள் படம் பிடித்து வீரமாக வெளியிட்டுள்ளனர்.
கடந்த மாதம் ஒரு இளைஞர் மேற்கு வங்க மாநிலத்தில் மாட்டு வியாபாரி என்ற சந்தேகத்தில் அடித்துக் கொல்லப்பட்டார். ஆனால் அவர் ஒரு ஜ.ரி பட்டதாரியாவார்.
உள்நாட்டில் மாடு வியாபாரிகள் என்ற பெயரில் முஸ்லிம்கள் இந்துமத வெறியர்களால் தாக்கப்படுகின்றனர். ஆனால் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகில் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது.
அப்பாவி முஸ்லிம்களை தாக்கும் இந்துமத வெறியர்கள் ஏன் மாட்டிறைச்சி ஏற்றுமதி முதலாளிகளை தாக்குவதில்லை?
இது குறித்து பிரதமர் மோடிக்கு கொஞ்சம்கூட வெட்கம் இல்லை. அவரது நீதிமன்றங்களுக்கும் கொஞ்சம்கூட அக்கறை இல்லை.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பது குற்றமில்லை என்று ஊழல் அரசியல்வாதிகளுக்கு சார்பாக தீர்ப்பு கூறும் இந்திய நீதிமன்றத்தில் அப்பாவிகளான இந்த பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காதது ஆச்சரியம் இல்லைதான்.
இதோ மணிப்பூர் மாநிலத்தில் பெண்களும் குழந்தைகளும் இந்திய அரசக்கு எதிராகப் போராடுவதை பாருங்கள்.
தமது உரிமைக்காக அவர்கள் ராணுவத்தின் தாக்குதல்களுக்கும்; அஞ்சாமல் இந்திய அரசை எதிர்த்து போராடி வருகிறார்கள்.
தனது நாட்டில் சிறுபான்மை தேசிய இனங்களை அடக்கிவரும் இந்திய அரசு, இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவும் என சிலர் இன்னமும் கூறிவருகிறார்கள்.
இந்தியாவில் தேசிய இனங்களின் உரிமைகளை மறுக்கும் இந்திய அரசு, இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுத் தரும் என்று கூறுபவர்களை என்னவென்று அழைப்பது?

No comments:

Post a Comment