Thursday, June 30, 2016

பாக்கிஸ்தான் அகதிகளுக்கு ஒரு நியாயம்! ஈழ தமிழ் அகதிகளுக்கு இன்னொரு நியாயம்!! இதுதான் இந்திய மோடி அரசின் நியாயம்!!!

•பாக்கிஸ்தான் அகதிகளுக்கு ஒரு நியாயம்!
ஈழ தமிழ் அகதிகளுக்கு இன்னொரு நியாயம்!!
இதுதான் இந்திய மோடி அரசின் நியாயம்!!!
பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து அகதியாக வந்த இந்துக்களுக்கு ஆகஸ்ட் 15ல் இந்திய குடியுரிமை வழங்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுமார்35 வருடங்களாக தமிழகத்தில் 3லட்சம் ஈழத் தமிழர்கள் அகதிகளாக இருந்து வருகிறார்கள்.
அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயா அம்மையார் உட்பட அனைத்து தமிழக தலைவர்களும் கோரி வருகிறார்கள்.
ஆனால் இந்திய அரசு ஈழ அகதிகளுக்கு குடியுரிமை மறுத்து வருகின்ற அதேவேளை பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்குகின்றது.
ஈழ அகதிகளும் இந்துக்கள்தானே. அப்படியென்றால் ஏன் அவர்களுக்கு இந்திய குடியுரிமை மறுக்கப்படுகிறது?
இந்துவாக இருந்தாலும் தமிழன் என்பதால்தானே ஈழ அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது.
இனியாவது தமிழக தமிழர்கள் இதனை உணர்ந்து கொள்வார்களா?
இந்தியா ஈழத் தமிழர்களுக்கு உதவும் என்று கூறும் ஈழ தமிழ்த் தலைவர்கள் இதை உணர்ந்து கொள்வார்களா?
இந்து தமிழீழம் கோரினால் இந்தியா உதவும் என்று கூறிய கவிஞர் காசி அனந்தன் இதற்கு என்ன கூறப்போகிறார்?
இன்னுமாடா இவங்களை உலகம் நம்புது?

No comments:

Post a Comment