Thursday, June 30, 2016

சுதாகரன் சுதர்சன் என்பவர் தெரிவித்த கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
இலங்கையில் மட்டக்கிளப்பைச் சேர்ந்த நண்பர் சுதாகரன் சுதர்சன் என்பவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
வணக்கம் பாலன் தோழர் !
தங்கள் இரு நூல்கள் என் கரம் கிடைத்தது. லண்டனில் வாழும் சகோதரி ஒருவரின் உதவியுன் சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாம் என்ற நூலும், இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு நூலும் டுபாயில் பெற்றுக்கொண்டேன்.
அதில் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு நூலானது படித்து முடித்து விட்டேன்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் தாண்டி இந்தியா இலங்கை மீது கொண்ட கொண்டுள்ள ஆக்கிரமிப்புகளை ஜதார்த்தமாக கூறியுள்ளீர்கள்.
அதனை வெறுமனே புத்தகமாக படித்தால் போதாது உணர்ந்து படிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
இந்திய போக்கும் அதற்கு நலிந்து போகும் சிறிலங்கா அரசின் நெகிழ் தன்மையும் இந்த நூலில் தெளிவாகிறது.
காலம் காலமாக நாம் அடிமைப்பட்ட சமூகம் என்பதை உணர்ந்து அதனை சாதகமாக பயன்படுத்தி தன் உள்ளே எமை இழுத்து தன்னில் ஒரு மாநிலமாக மாற்றும் முயற்சி எப்போதும் நடை பெறுகின்றது என்பதை உணர வைத்திருக்கிறது இந்த நூல்.
நன்றிகள்

No comments:

Post a Comment