Wednesday, June 22, 2016

•வடமாகாணசபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அய்யா அவர்கட்கு!

•வடமாகாணசபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அய்யா அவர்கட்கு!
தமிழக முதலமைச்சராக ஜெயா அம்மையார் தெரிவு செய்யப்பட்டமைக்கு நீங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளீர்கள்.
ஜெயா அம்மையாரும் உங்களை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அறிகின்றோம். மிக்க மகிழ்ச்சி.
இலங்கை அரசை மீறி மகாண முதலமைச்சராலும், இந்திய அரசை மீறி தமிழக முதலமைச்சராலும் இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட முடியும் என எம்மால் நம்பிக்கை கொள்ள முடியவில்லை.
ஆனால் நீங்களும் ஜெயா அம்மையாரும் உண்மையில் விரும்பினால் தமிழ் மக்களுக்கு சில நன்மைகள் செய்ய முடியும்.
குறிப்பாக, இந்தியாவில் பல வருடங்களாக எந்த வித வழக்கும் இன்றி, எந்தவித விசாரணையும் இன்றி, எந்தவித தண்டனைகளும் இன்றி, சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்ய முடியும்.
நேற்றைய தினம் முதல் திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி காலவரையற்ற உண்ணாவிரம் மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கம்போல் இந்த முறையும் அவர்களை ஏமாற்றாது, இந்த முறையாவது அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும்.
அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை பெற உங்களால் நிச்சயம் வழி செய்ய முடியும். செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்.

No comments:

Post a Comment