Wednesday, June 22, 2016

•சொந்த மக்களையே கொன்று குவிக்கும் இந்திய ராணுவம்!

•சொந்த மக்களையே கொன்று குவிக்கும் இந்திய ராணுவம்!
ஈழத்தில் நெல்லியடி என்னும் இடத்தில் மெண்டல் பத்மநாதன் என்னும் மனநோயாளியை சுட்டுக்கொன்றுவிட்டு புலிகளின் முக்கிய தளபதியை கொன்றுவிட்டதாக அறிக்கைவிட்ட அதே இந்தியராணுவம் காஸ்மீரில் அப்பாவி முஸ்லிம்களை சுட்டுக்கொன்றுவிட்டு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதாக அறிக்கை விடுகிறது.
ஈழத்தில் 80 வயதுக் கிழவியைக்கூட பாலியல் வல்லுறவு செய்து கொன்றுவிட்டு பெண் புலியைக் கொன்றுவிட்டதாக அறிக்கைவிட்ட அதே இந்திய ராணுவம்தான் சதீஸ்கர் மாநிலத்தில் ஆதிவாசிப் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொன்றுவிட்டு மாவோசிய தீவிரவாதப் பெண்களை கொன்றதாக அறிக்கை விடுகிறது.
வெளிநாட்டு காப்ரேட் கம்பனிகளுக்காக ஆதிவாசி மக்களை அவர்களது மண்ணில் இருந்து வெளியேற்ற சட்டம் இயற்றியது மட்டுமன்றி அவர்களை ராணுவத்தின் மூலம் சித்திரவதை செய்கிறது இந்திய அரசு.
சதீஸ்கர் மாநிலத்தில் மதவாத பிஜே.பி அரசே அட்சி செய்கிறது. மத்தியில் மோடி அரசு இருக்கிறது. இரண்டும் சேர்ந்து அப்பாவி இந்திய மக்களை ராணுவத்தின் மூலம் கொன்று குவிக்கின்றன.
காஸ்மீர், மணிப்பூர், நாகலாந்து, அசாம், என பல மாநிலங்களில் கறுப்பு சட்டங்களின் மூலம் ராணுவ ஆட்சியே நடக்கிறது. மனித உரிமை மீறல்களை அரசே செய்கிறது.
தனது சொந்த மக்களையே கொன்று குவிக்கும் இந்திய ராணவம் இலங்கையில் எப்படி நடந்து கொண்டிருக்கும் என்பதை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.
தனது சொந்த மக்களையே இரக்கமின்றி கொன்று குவிக்கும் இந்திய அரசு இலங்கையில் தமிழ் மக்களுக்கு உதவும் என்று எப்படி நம்புவது?
இத்தனை அழிவுக்கு பின்னரும,; இத்தனை அழிவுக்கும் காரணமான இந்திய அரசு, இலங்கை தமிழருக்கும் உதவும் என்னும் முட்டாள்தனத்தை என்னவென்று அழைப்பது?

No comments:

Post a Comment