Thursday, June 30, 2016

Thamilan Wannimakan என்பவர் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்த தெரிவித்த கருத்துகள் வருமாறு.

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
இலங்கையில் கிளிநொச்சியில் வாழ்ந்து வரும் Thamilan Wannimakan என்பவர் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்த தெரிவித்த கருத்துகள் வருமாறு. (அவர் வன்னியில் வாழ்ந்து வருவதால் பாதுகாப்பு நலன் கருதி அவரது சொந்த விபரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.)
'இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு' தோழர் பாலன்
இந்தியாவின் இலங்கைமீதான 'கரிசனைகள்' முற்றுமுழுதான இந்திய பூகோள அரசியல் நலன் சார்ந்தவையே. இதனால் ஈழத்தமிழ் மக்களுக்கு எதுவித நன்மையும் ஏற்படவில்லை. இனியும் ஏற்படப் போவதில்லை. மாறாக இந்தியத் தலையீடு ஈழத்து தமிழ் மக்களுக்கு அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு என்றும் பாதகமாகவே அமையும் என்ற உண்மைநிலையை இந்த நூல் மிகவும் அழுத்தமாக வெளிப்படுத்தி நிற்கிறது.
ஈழத்தமிழருக்கு இந்தியா உதவியிருக்கும் அல்லது உதவும் என்று இன்றும் நம்பும் தமிழருக்கு முகத்தில் அறையும் யதார்த்தங்களை இந்தநூல் முன்னிலைப் படுத்தி நிற்கிறது. அத்துடன் இன்னும் இந்தியாவை நம்புங்கள் என்று நமக்கு போதிப்போரின் முகத் திரைகளும் இங்கு கிழிந்து தொங்குகின்றன.
"இந்தியா ஒருபோதும் தமிழழீத்தை ஆதரிக்காது. இந்திய அரசு போராளிகளுக்கு உதவுவது என்பது இலங்கை முழுவதையும் தனது ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வருவதற்கே. பங்களாதேசில் தனது நோக்கம் நிறைவேறியதும் எப்படி தான் பயிற்சி கொடுத்த போராளிகளை அழித்ததோ அதேபோன்று இலங்கையிலும் தனது நோக்கம் நிறைவேறியதும் ஈழப் போராளிகளை இந்திய அரசு அழிக்கும்!" என்ற தமிழரசனுடைய பார்வை மிகத் தெளிவானதே.
தமிழரசனுடைய இந்த கூற்றை ஈழப் போராளி அமைப்புகள் ஏற்றிருந்தால் இலங்கையில் இந்தியாவின் ஆக்கிரமிப்பைத் தவிர்த்திருக்க முடியயும் . முள்ளிவாய்க்கால் அழிவைக் கூட தடுத்திருக்கலாம் என நூலாசிரியர் குறிப்பிடுவது அவரிடமிருந்து இது தொடர்பான தெளிவான விளக்கமொன்றை கோர நிர்ப்பந்திக்கிறது.
பஞ்சசீலக் கொள்கை தொடர்பாக ஆசிரியர் குறிப்பிடும் போது சீனப் பிரதமர் சூஎன்லாய் அவர்களினால் தயாரிக்கப்பட்ட பிரேரணை சூஎன்லாய் நேரு ஆகியவரினது பிரேரணையாக பாண்டுங் மாநாட்டில் கொண்டுவரப்பட்டது என்றும் அதனை இந்தியா அந்த மண்டபத்திலேயே மீறிவிடத்தையும் சுட்டி காட்டுகிறார்.
இந்த இடத்தில் ஆசிரியர் சீனா தொடர்பில் ஏதும் கூறாது விட்டிருப்பது 'ஆக்கிரமிப்பு' தொடர்பான பார்வையை சீனா தொடர்பில் மட்டுப் படுத்திக் கொண்டாரா என நினைக்கத் தோன்றுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் அடைப்படை அம்சமே 'ஒரு நாட்டின் தனித்துவ கௌரவத்தையும் அரசாங்க அதிகாரத்தையும் மற்ற நாடுகள் மதிக்க வேண்டும். எந்த நாடும்பிறநாட்டைஆக்கிரமிக்கத்தாக்கக்கூடாது.'என்பதுதான்.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும்சந்தர்ப்பத்திலேயே(1954) சீனாவின்ஆக்கிரமிப்புக்குள் திபெத் அகப்பட்டிருந்தது. இன்னும் ஆக்கிரமிப்புத் தொடர்கிறது.
இந்த நூல் பொதுவாக அயல் நாடுகளில் இந்தியாவின் தலையீடு பற்றியும் குறிப்பாக 'இலங்கையில் இந்தியாவின் ஆக்கிரமிப்பு' பற்றியும் பேசுகிறது.
இருந்த போதிலும் இன்றைய உலகளாவிய ரீதியில் காணப்படும் பூகோள அரசியல் நிலைமைகளை பற்றி பேசாது விட்டிருப்பது ஒரு தொடர்புநிலை தொய்வு போல தெரிகிறது.
அதுபோல இலங்கையில் இந்தியாவின் ஆக்கிரமிப்புப் பற்றி விலாவாரியாக விபரிக்கும் இந்த நூலில் இலங்கை தொடர்பில் ஏனைய நாடுகளின் தலையீடு பற்றியும் குறிப்பாக அமெரிக்காஇ சீனா பற்றியும் சுருக்கமாகவேனும் ஆராயப் பட்டிருக்க வேண்டும். இலங்கையில் அந்நிய நாடுகளின் தலையீடுகள் ஒன்றுடன் ஒரு தொடர்புபட்டவையே.
இந்தியாவின் இலங்கை மீதான ஆக்கிரமிப்புக்கு ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி இந்தியத் தமிழரும் பலியாக்கப் படுகின்றனர். தமிழ் நாட்டு மீனவர்களில் 600 இற்கும் மேற்பட்டோரை சிறி லங்கா படைகள் படுகொலை செய்துள்ளன. இருந்தும் இந்திய அரசு இன்றுவரை அது தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்திய அரசு விரும்பியிருந்தால் எப்போதோ இதற்கு முடிவுகட்டியிருக்க முடியும்.
ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இலங்கைமேல் வேண்டிய நேரத்தில் தனது அழுத்தத்தை அல்லது ஆக்கிரமிப்பை பிரயோகிக்க ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்த விரும்புகிறது.
இந்தியாவின் பலாலி விமான நிலைய கரிசனை தொடர்பாக பலர் கொண்டிருக்கும் 'அவிவிருத்தி' நப்பாசையில் நூலாசிரியர் மண்ணள்ளிப் போடுகிறார். பலாலி விமானநிலையம் ஒரு சர்வதேச விமான நிலையமாக மாற்றமடைய இந்தியா இடமளியாது என்ற உண்மை இந்தியாவின் நிபந்தனைகளில் இருந்து தெளிவாகிறது.
அத்துடன் விமான நிலைய அபிவிருத்தி என்ற போர்வையில் நிரந்தரமாக பறிபோகவிருக்கும் 1இ500 குடும்பங்களின் காணிகள் பறிபோகும் ஆபத்து நிலையும் இங்கு சுட்டிக்காட்டப் படுகிறது.
இந்த பலாலி விமான நிலைய அபிவிருத்தி என்பதில் மறைந்து கிடக்கும் பாதகமான நிலமைபற்றி தமிழ் அரசியல்வாதிகள் யாரும் அலட்டிக் கொள்வதில்லை. அவர்கள் கதிரை சுகமே கதியென்று கிடக்கிறார்கள். மேலும் மேலும் இது தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கைகள் எதிலும் யாரும் ஈடுபடுவதில்லை.
இந்த நிலையில் இந்தநூல் அது பற்றி நிறைய விடையங்களைப் பேசுகிறது. இதன் மூலம் மறைக்கப்படுகின்ற பல விடையங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன.
அடுத்து இந்தியாவிற்கு கிழக்கில் தாரைவார்க்கப் பட்டுள்ள 675 சதுர கி.மீ பரப்புள்ள தமிழர் நிலம் பற்றி குறிப்பிடப் படுகிறது. இது பற்றி எம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம். இது பற்றி யாராவது கவனத்தில் கொள்கிறார்களா?
இதேபோல் தமிழரின் பாரம்பரிய நிலப்பகுதியான சாம்பூர் அனல் மின்நிலையத்திற்காக மக்களினதும் சுற்றுச் சூழலியலாளர்களினதும் எதிர்ப்பை மீறி இந்தியாவுக்கு வழங்கப் பட்டுள்ளது.
நிலக்கரியால் இயக்கப்படும் இந்த மின்நிலையத்தால் ஏற்படும் மிக ஆபத்தான சூழலியல் பாதிப்புகள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப் பட்டுள்ளது.
இந்த மின்நிலையத்தால் இந்தியாவிற்கோ அல்லது இலங்கைக்கோ பொருண்மிய இலாபம் ஏதும் இல்லை என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. அவ்வாறாயின் அவை அடையும் இலாபம் என்ன என்பதே இங்குள்ள கேள்வி. இந்தியாவின் பூகோள அரசியல் நலன் மற்றும் சிறிலங்காவின் தமிழ் தேசிய இனவெதிர்ப்புக் கொள்கை என்பவையே இதற்கான பதிலாக அமையமுடியும்.
இது போலவே மன்னார் வளைகுடாவில் நடைபெறும் “எண்ணெய் அகழ்வு” தொடர்பான இந்தியாவின் செயற்பாடடையும் நாங்கள் நோக்க வேண்டும். இன்னும் மன்னார் வளைகுடாவில் பொருளதார இலாப நிலையைப் பெறுவதற்குரிய எண்ணெய்வளம் இருப்பது உறுதி செய்யப்படாத நிலையில் அந்த பரப்பில் இந்தியா காலூன்றுகிறது.
மேலும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் மீழ் இயக்க நடவடிக்கை என்பது யாழ் குடாநாட்டின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் ஒரு மிகமோசமான
நடவடிக்கையே. முற்று முழுதாக பாதிக்கப் படைப்பு போவது தமிழர்களே.
இவ்வாறு சிறிலங்கா அரசின் உதவியுடன் நடக்கும் இந்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் பற்றி இலங்கையின் அரசியல் வாதிகளோ அல்லது அமைப்புகளோ வாய்திறந்தாக தகவல் இல்லை.
இவைதொடர்பில் பேசவேண்டியஇஎதிர்த்துப் போராடவேண்டிய தமிழ் அரசியல் வாதிகள் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்ட்டமைப்பினர் கண்ணமூடிஇ கைகட்டிஇ வாய்பொத்தி நிற்கிறார்கள்.
இந்த நூலில் ஏராளமான தகவல்களை நூலாசிரியர் பகிர்ந்து கொள்கிறார். இவ்வாறான ஒரு நூலை வெளியிடும் போது தகவல்கள் மற்றும் புள்ளிவிபரங்கள் தொடர்பாக உசாத்துணை குறிப்புகளைக் கொடுப்பது மிகப் பயனுள்ளது அவசியமானதும் கூட.
இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியத் தூதரகங்கள் பற்றிய விடயமும் அவசியம் கருத்தில் கொள்ளப் படவேண்டியதே. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் தூதராகச் செயட்பாடுகள் தமிழருக்கு உதவும் அல்லது நன்மை பயக்கும் ஒன்றாக இல்லை. இந்த இந்தியத் தூதராகச் செயட்பாடுகள் சிறிலங்கா அரசுக்கு துணை செய்பவையாகவே உள்ளன.
அத்துடன் தமிழர் கலாசார பண்பாட்டு விடையங்களிலும் அவர்களின் மேலான விடுதலை உணர்விலும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய விடயங்களையும் இந்த தூதரகம் மறைமுகமாக முன்னெடுப்பதாக தெரிகிறது.
இன்றைய நிலையில் இந்தியாவின் ஈழத்து தமிழர்களுக்கு எதிரான பெரும் அச்சுறுத்தல் இந்த இந்தியத் தூதரகம்.
எந்த பௌதீக வளங்களை ஒரு தேசிய இனம் இழப்பினும் அதனை மீளவும் தன்னகப் படுத்திக் கொள்ள முடியும் ஆனால் தனது மொழி பண்பாடு கலாசார கூறுகளை அதற்கு மேலாக அதன் விடுதலை உணர்வை அந்த இனம் இழந்தால் அதனை மீடடெடுப்பது மிகமிகச் சிரமம். ஆதிக்க சக்திகள் இவற்றை அழிப்பதில் அல்லது நீர்த்துப் போகச்செய்வதில் மிக முனைப்புக் காட்டி நிற்கின்றன.
' இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு' என்ற இந்த நூல் காலத்தின் தேவையாகும்.
-- வன்னிமகன் --

No comments:

Post a Comment