Thursday, August 18, 2016

•இந்தியாவின் 70வது சுதந்திர தினம். தமிழ் இனம் பெருமைப்பட என்ன இருக்கிறது?

•இந்தியாவின் 70வது சுதந்திர தினம்.
தமிழ் இனம் பெருமைப்பட என்ன இருக்கிறது?
5 அடுக்கு பாதுகாப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி சுதந்திரதின உரையாற்றுகிறார். 5 ஆயிரம் பாதுகாப்பு படைகள் மத்தியில் சுதந்திரதின கொடி ஏற்றுகிறார்.
3 லட்சம் படைவீரர்கள் காஸ்மீரில் குவித்து வைத்துவிட்டு இதுவரை 97 ஆயிரம் காஸ்மீர் மக்களை கொன்றுவிட்டு சுதந்திர தினம் கொண்டாடுகிறார்.
இஸ்ரவேல்கூட பாலஸ்தீன மக்கள் மீது பெல்லட் குண்டுகளை சுடவில்லை. ஆனால் இந்தியா தன் காஸ்மீர் மக்களை பெல்லட் குண்டுகளால் சுட்டுத் தன்னை ஜனநாயக நாடு என்கிறது.
வெள்ளைக்காரர்கள் ஆண்ட தேசத்தை கொள்ளைக்காரர்கள் ஆள்கிறார்கள். ஆனால் மக்கள் வாழ்வில் பெருமைப்படும் எந்த மாற்றமும் வரவில்லை.
செவ்வாய்க்கு ராக்கட் விடும் தேசத்தில் இன்றும் மனித்கழிவை மனிதனே கையால் அள்ளும் அவல நிலையே இருக்கிறது.
இந்தியாவில் பெரிய காப்ரேட் கம்பனிகள் செலுத்த வேண்டிய வராக் கடன் 5லட்சம் கோடி. ஆனால் கல்விக்கடன் கட்டவில்லை என்று மதுரையில் மாணவன் ஒருவனை தற்கொலை செய்ய வைத்துள்ளது அரசு.
ரிலைன்ஸ் (முகேஸ் குரூப்)- 187070 கோடி ரூபா கடன்
ரிலைன்ஸ் குரூப்- 121000 கோடி ரூபா கடன்
எஸ்ஸார் குரூப் - 101461 கோடி ரூபா கடன்
அதானி குரூப் - 96000 கோடி ரூபா கடன்
ஜேபி குரூப் - 75000 கோடி ரூபா கடன்
ஜிஎம்ஆர் குரூப் - 47976 கோடி ரூபா கடன்
லான்கோ குரூப் - 47102 கோடி ரூபா கடன்
வீடியோகான் - 45400 கோடி ரூபா கடன்
காப்ரேட் கம்பனிகளின் கோடிக்கணக்கான ரூபா கடன்களை அறவிட எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் ஏழை விவசாயிகளின் கடன்களை அறவிட அவர்களை வதைக்கிறது அரசு.
நாடு சுதந்திரம் அடைந்து 70 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்தியாவில் 30 வீதம் மக்களுக்கு கழிப்பறை இல்லை. 40 வீதம் மக்களுக்கு கல்வி இல்லை. 45 வீதம் மக்களுக்கு குடிதண்ணீர்கூட இல்லை.
இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் இரண்டு பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுகின்றனர். நாட்டில் அப்பாவி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் மக்கள் வரிப் பணத்தில் முதலாளி அம்பானியின் மனைவிக்கு இசட் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
மூன்று முழக் கயிற்றால் கட்டப்பட்ட மாட்டிற்கு 10 முழக் கயிற்றால் கட்டியபோது அந்த மாடு தனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக கத்தினால் அது எந்தளவு முட்டாள்தனமோ அதைவிட முட்டாள்தனமானது இந்தியாவில் தமிழர்கள் தமக்கு சுதந்திரம் கிடைத்தவிட்டது என மிட்டாய் வழங்கி வந்தேமாதரம் பாடுவது.
வெள்ளைக்காரன் காலத்தில் தமிழகத்தில் வசூலிக்கப்பட்ட வரித்தொகை ஒரு வருடத்தில் சுமார் 350 கோடி ரூபா. ஆனால் தற்போது கொள்ளைக்கார இந்திய மத்திய அரசு தமிழகத்தில் வசூலிக்கும் வரி கடந்த ஆண்டு மட்டும் 85000கோடி ரூபா.
85000கோடி ரூபா வரியாக வசூலிக்கும் மத்திய அரசு தமிழகத்திற்கு திருப்பி உதவியாக கொடுக்கும் பணம் 28000கோடி ருபா மட்டுமே. அதிலும் அடுத்த அண்டு முதல் 6000கோடி ரூபா குறைக்கப்படவிருக்கிறது.
அதேவேளை தமிழக அரசின் இன்றைய கடன் 1.21லட்சம் கோடி ரூபா. இதற்கு வட்டியாக 10754 கோடி ரூபா தமிழக அரசு கட்டுகிறது.
ஒவ்வொரு தமிழன் தலையிலும் 13862 ரூபா கடன் சுமத்தப்பட்டுள்ளது. அதாவது பிறக்கும் ஒவ்வொரு தமிழக்; குழந்தையும் 13862ரூபா கடனுடனே பிறக்கின்றது.
வருடம் 57000கோடி ரூபாவை தமிழகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு அந்த பணத்தில் இருந்தே தமிழ் மீனவனை சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படைக்கு பயிற்சி அளிக்கிறது.
தமிழகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளும் நிதியில் இருந்தே தமிழர்களை கொன்றொழித்த இலங்கை ராணவத்திற்க இந்திய அரசு உதவி வழங்கிறது.
தமிழகத்தில் தமிழர்களிடமிருந்து பெறப்படும் நிதியில் இருந்தே இந்திய அரசு இலங்கை அரசின் துண்டு விழும் பட்ஜட் நிதிக்கு கடன் கொடுத்து காப்பாற்றுகின்றது.
உலகில் தன் மக்களைக் கொல்லும் கடற்படைக்கு தானே நிதி வழங்கிய தமிழக தமிழர்களின் அறியாமையை என்னவென்று அழைப்பது?
தமிழ் இனத்தை அழிக்கும் இலங்கை அரசுக்கு நிதி வழங்கும் தமிழக தமிழர்களின் அடிமைத்தனத்தை என்னவென்பது?
இப்போது கூறுங்கள் தமிழர்களே!
இந்தியாவில் தமழிழக தமிழனுக்கு சுதந்திரதினம் பெருமைப்பட என்ன இருக்கிறது?

No comments:

Post a Comment