Wednesday, August 31, 2016

•ஓ! புத்தரே எமது அறியாமையை மன்னித்து விடுங்கள்!

•ஓ! புத்தரே
எமது அறியாமையை மன்னித்து விடுங்கள்!
2500 வருடங்களுக்கு முன்னரே “கடவுள் இல்லை” என்று சொன்ன முதல் பகுத்தறிவுவாதி நீ.
“கடவுள் இல்லை” என்று சொன்ன உன்னையே கடவுளாக்கிய முட்டாள்கள் .
அன்பு தான் கடவுள் என்றாய் நீ. அன்பையே நீ உலகிற்கு போதித்தாய்.
ஆனால் அடாவடித்தனமே எமது மதம் என்று உன் சிலையை உடைத்துக் காட்டியிருக்கிறோம் நாம்.
மன்னித்தவிடு. உன் சிலையை வைத்தவர்களை எங்களால் உதைக்க முடியவில்லை.
எனவேதான் இரவில் இரகசியமாய் வந்து உன்னை உடைத்து போட்டிருக்கிறோம்.
எமது கடவுள் சிலைகளை உடைத்த ராணுவத்திற்கும் உமது சிலையை உடைத்த எமக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று காட்டியிருக்கிறோம்.
உனது சிலையை எம் மண்ணில் வைத்தவர்களும் , உமது சிலையை உடைத்த நாங்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை நிரூபித்தள்ளோம்.
உன் சிலையை வைத்து அவர்கள் சிங்கள மக்களை ஏமாற்றினார்கள். உனது சிலையை உடைத்து நாம் தமிழ் மக்களை ஏமாற்றியிருக்கிறோம்.
இனி தீர்வு வராவிட்டாலும் பரவாயில்லை. எமது தலைவர்களுக்கு அடுத்த தேர்தலில் வெல்ல வாய்ப்பு கிடைத்துவிட்டது.
அவதானிப்பு- வர்க்க அரசியலை மறைக்க சிலை அரசியல் முன் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment