Thursday, August 18, 2016

•நண்பேன்டா!

•நண்பேன்டா!
இன்று நண்பர்கள் தினம் என்று பலரும் நண்பர் தின வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.
குறிப்பாக நட்புக்கு சிறந்த உதாரணமாக மாக்ஸ் எங்கெல்ஸ் நட்பை பலரும் பகிர்ந்துள்ளனர்.
உண்மைதான். இந்த உலகில் சிறந்த காதலுக்கு மாக்ஸ் ஜென்னி என்பது போல் சிறந்த நட்புக்கு மாக்ஸ் எங்கெல்ஸ் உறவு இருக்கிறது.
இப்போது இலங்கையில் இரு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய (கள்ள) நட்பு ஒருவரை ஒருவர் நன்கு பாதுகாத்து வருகிறது.
சர்வதேச விசாரணை மட்டுமல்ல உள்ளுர் விசாரணைகூட நடத்தாமல் தன் நண்பர் மகிந்தவை மைத்திரி பாதுகாத்து வருகிறார்.
மகிந்த மீது ஒரு வழக்குகூட பதிவு செய்யாமல் , கைது செய்யாமல்; அவரை மைத்திரி காப்பாற்றி வருகிறார்.
மகிந்தவின் மனைவி சிராந்தி மீது விசாரணை முடிந்து பல மாதங்களாகிவிட்டது. அவரையும்கூட கைது செய்யாமல் மைத்திரி காப்பாற்றி வருகிறார்.
மகிந்தவின் பிள்ளை நாமலைக்கூட ஒரு வாரத்தில் ஜாமீனில் விடுதலை பெற வழி செய்தார்.( தமிழ் கைதிகள் பல வருடங்களாக ஜாமீன் விடுதலை இன்றி சிறையில் இருப்பதை கவனியுங்கள்)
பல்லாயிரம் கோடி ரூபா மோசடி செய்த மகிந்த கும்பலிடம் இதுவரை ஒரு ரூபாகூட பறிமுதல் செய்யப்படவில்லை.
பல்லாயிரம் தமிழ் மக்களை படுகொலை செய்த மகிந்த கும்பல் மீது இதுவரை ஒரு வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை
மகிந்த போல இவரும்,
தமிழ் கைதிகளை விடுதலை செய்யாமல் இருக்கிறார்.
அகதிகளை மீள் குடியேற்றம் செய்யாமல் இருக்கிறார்.
காணாமல் போனோரை கண்டு பிடிக்காமல் இருக்கிறார்.
இவர்கள் இருவரையும் நல்ல நண்பர்கள் என அழைப்பதில் தவறு உண்டா?

No comments:

Post a Comment