Wednesday, August 31, 2016

•கோவிந்தா! கோவிந்தா!

•கோவிந்தா! கோவிந்தா!
மகிநதவும் திருப்பதி போய் கும்பிடுகிறார்
மைத்திரியும் திருப்பதி போய் கும்பிடுகிறார்.
இவர்களுக்கு இலங்கையில் உள்ள சாமிகளை கும்பிட முடியாதா?
இவர்களுக்கு இலங்கையில் உள்ள சாமிகள் மீது நம்பிக்கை இல்லையா?
இவர்கள் இலங்கை சாமிகளைவிட திருப்பதி சாமியை ஏன் அதிகம் நம்புகிறார்கள்?
சாமி கும்பிடவும் இந்தியாதான் செல்ல வேண்டுமா?
என்ன இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் ஜனதிபதி அவர்களே!
குறிப்பு-
கடவுள் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார் என்றார்களே?
அப்படியென்றால் எதற்காக திருப்பதி செல்ல வேண்டும்?
இலங்கைத் தூணிலும் துரும்பிலும் கடவுள் இல்லை என்கிறார்களா?
இந்திய கம்பனிகள் மட்டுமல்ல இந்திய கடவுளும் இலங்கையை ஆக்கிரமிக்கப் போகிறது!
DEAL ? OR NO DEAL ?
திருப்பதி ஆண்டவன் கொஞ்சம் பணக்கார கடவுள்தான்.
பக்தர்களிடம் நிறைய பணம் வாங்கிறாராம்.
“பணம் தருகிறோம். மைத்திரி மூலம் தீர்வு பெற்று தாருங்கள்” என்று திருப்பதி சாமியிடம் தமிழர்கள் ஒரு டீல் போட்டால் என்ன?

No comments:

Post a Comment