Thursday, August 18, 2016

•இந்தியா ஈழத் தமிழர்களுக்கு உதவுகிறதாம். இன்னும் எத்தனை நாளைக்கடா இந்த கதையை சொல்லப்போறியள்?

•இந்தியா ஈழத் தமிழர்களுக்கு உதவுகிறதாம்.
இன்னும் எத்தனை நாளைக்கடா இந்த கதையை சொல்லப்போறியள்?
இங்கிலாந்து சென்ற ஈழ அகதிகளுக்கு
குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது
உயர் கல்வி கற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஒரு தமிழர் 12 வருடங்களுக்கு மேலாக கவுன்சிலராக உள்ளார்.
நோர்வே சென்ற ஈழ அகதிகளுக்கு
குடியுரிமை வழங்கப்படுகிறது.
உயர் கல்வி கற்ற வாயப்பு வழங்கப்படுகிறது
தமிழ் பெண் ஒருவர் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
டென்மார்க் சென்ற ஈழ அகதிகளுக்கு
குடியுரிமை வழங்கப்படுகிறது.
உயர் கல்வி கற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஒரு தமிழ் பெண் விமான ஓட்டுனராகியுள்ளார்.
கனடா சென்ற ஈழ அகதிகளுக்கு
குடியுரிமை வழங்கப்படுகிறது
உயர் கல்வி கற்க வாயப்பு வழங்கப்படுகிறது.
தமிழர் ஒருவர் எம்.பி யாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் இந்தியா சென்ற ஈழ அகதிகளுக்கு
33 வருடமாகியும் குடியுரிமை வழங்கப்படவில்லை.
அகதி என்பதால் உயர் கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
நந்தினி என்ற அகதி மாணவி மருத்துவ படிப்பிற்கு தேவையான புள்ளிகள் எடுத்திருந்தும் அகதி என்பதால் மருத்துவ கல்வி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சீனா அரசு அந்த மாணவிக்கு புலமைப் பரிசிலுடன் மருத்துவ கல்வி கற்க வாய்ப்பு வழங்கியுள்ளது.
தொப்புள்கொடி உறவுகள் என்றும்
வந்தாரை வாழவைக்கும் நாடு என்றும்
நம்பிச் சென்ற ஈழ அகதிகளை
சிறப்புமுகாமில் அடைக்கிறது தமிழக அரசு.
இந்தியாவில் தொடர்ந்து இருக்க விரும்புவோருக்கு
குடியுரிமை வழங்க மறுக்கிறது இந்திய அரசு.
இலங்கைக்கு திரும்ப விரும்புவோருக்கு பல்லாயிரம் ரூபா தண்டப் பணம் கட்டினால்தான் அனுமதிக்க முடியும் என்கிறது இந்திய அரசு.
ஈழ அகதிகளை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் தொடர்ந்து துன்புறுத்தும் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு உதவும் என்கிறார்களே.
இன்னும் எத்தனை நாளைக்கு இந்தக் கதையை அவர்கள் எமக்கு கூறப் போகிறார்கள்?

No comments:

Post a Comment