Wednesday, August 31, 2016

தோழர் சந்திரசேகர் அவர்கள் “ இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு “நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கட்சியை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், தற்போதைய யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் சந்திரசேகர் அவர்கள் “ இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு “நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
“எமது கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் அதன் ஆரம்பகால வகுப்புகளில் “இந்திய விஸ்தரிப்பு வாதம்’’ ஒன்றாகும்.
அதாவது இந்திய விஸ்தரிப்பு வாதத்தைப் பற்றி 1967களிலேயே பேசியவர்கள் நாம்.
தற்போது இந்தியாவின் விஸ்தரிப்புவாதம் மேலும் உக்கிரமடைந்திருக்கும் வேளையில், தோழர் பாலன் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூலை எழுதியமைக்காக தோழர் பாலன் அவர்களுக்கு முதலில் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏனெனில் இலங்கைக்கு வெளியே லண்டனில் அவர் தற்போது இருந்தாலும் இலங்கை குறித்த விடயத்தில் அக்கறையுடன் துணிச்சலாகவும் பகிரங்கமாகவும் அவர் இதனை எழுதியுள்ளார்.
பல கல்விமான்களும் புத்திஜீவிகளும் நிறைந்துள்ள யாழ்ப்பாணத்தில் இந்த இந்திய ஆக்கிரமிப்பு குறித்து யாருமே பேசாத நிலையில், நான் அறிந்தவரையில் தோழர் பாலன் மட்டுமே முதன் முதலாக பகிரங்கமாக இதனைப் பேசியுள்ளார்.
இன்று வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழு இந்திய ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசமாக காட்சியளிக்கின்ற நிலையில், இந்த இந்திய ஆக்கிமிப்புக்கு எதிராக துணிந்து பேச யாரும் முன்வராத நிலையில், தோழர் பாலன் அவர்கள் இந் நூல் மூலம் வழி காட்டியுள்ளார்.
இது ஒரு சிறிய நூல்தான். ஆனால் இந்திய ஆக்கிரமிப்பை புரிந்துகொள்ள தேவையான அளவு விபரங்களை இந் நூல் கொண்டிருக்கிறது.
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பை அறிந்து கொள்ள, இலங்கையில் உள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய மிகவும் அவசியமான நூல் இது.
இந் நூலை எழுதி வெளிக்கொணர்ந்தமைக்காக தோழர் பாலனுக்கு மீண்டும் எனது பாராட்டுகள்.
இலங்கை மீதான இநதிய ஆக்கிமிப்புக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள்வோம்.

No comments:

Post a Comment