Wednesday, August 31, 2016

•சிறப்புமுகாமை மூடுமாறு கோரி நம்பிக்கை தரும் நடவடிக்கைகள்.

Special Camp
•சிறப்புமுகாமை மூடுமாறு கோரி நம்பிக்கை தரும் நடவடிக்கைகள்.
சிறப்புமகாமிற்கு எதிரான போராட்டத்தின் பயனாய் செய்யாறில் அமைந்திருந்த சிறப்புமுகாம் அண்மையில் மூடப்பட்டுவிட்டது.
தற்போது திருச்சியில் மட்டுமே சிறப்புமுகாம் இருக்கிறது. அதனையும் மூடுவதற்கான போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும்.
கௌத்தூர் மணி அவர்கள் சிறப்புமகாமை மூடுமாறு கோரி கையெழுத்து இயக்கம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளார்.
தமிழ்தேசமக்கள் கட்சியினர் அனைத்து அரசியல் அமைப்புகளையும் உள்ளடக்கி சிறப்புமுகாம் முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிய வருகிறது.
இந்நிலையில் நியூசிலாந்தில் எனது “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூல் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 27.08.2016 யன்று நடைபெறவுள்ளது.
சிறப்புமுகாமை மூடுமாறு கோரி நடத்தப்படும் இவ்வாறான நிகழ்வுகள் அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விரைவில் விடுதலை பெறுவார்கள் என்ற நம்பிக்கையளிக்கின்றன.
இவ்வாறான நிகழ்வுகள் சிறப்புமுகாம் மூடப்படுவதற்கும் அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகள் விடுதலை செய்யப்படுவதற்கும் நிச்சயம் வழி சமைக்கும்.
எனவே அனைத்து தமிழ் மக்களும் இதற்கு ஆதரவு தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
எந்தளவு மக்களுக்கு இது சென்றடைகிறதோ அந்தளவு விரைவாக சிறப்புமுகாம் அகதிகள் விடுதலை பெறுவதற்கான வாயப்பு உண்டு.
ஏனெனில் மக்கள் மட்டுமே, மக்களால் மட்டுமே இதனை சாதிக்க முடியும்

No comments:

Post a Comment