Wednesday, August 31, 2016

•இவர்களும் தமிழர்கள்தானே? இவர்களுக்கு மட்டும் ஏன் இன உணர்வு வருகிறது?

•இவர்களும் தமிழர்கள்தானே?
இவர்களுக்கு மட்டும் ஏன் இன உணர்வு வருகிறது?
ஜெர்மனியில் இருக்கும் இவர்கள் விரும்பியிருந்தால்
மற்ற புலம்பெயர் தமிழர்கள் போல்
கோவிலில் உருண்டிருக்கலாம்
பால் குடம் எடுத்திருக்கலாம்
அல்லது கொலிடேக்கு நல்லூர்; சென்று படம் எடுதிருக்கலாம்.
தண்ணியடித்து பிறந்தநாள் கொண்டாடியிருக்கலாம்
அல்லது நாய்க்கு செத்தவீடு நடத்தியிருக்கலாம்.
நடிகர் சிம்புவை கட்டிப் பிடித்து படம் எடுத்திருக்கலாம்.
ஆகக்குறைந்தது சுப்பர் சிங்கர் பாடகர்களையாவது டிக்கட் எடுத்து பார்த்திருக்கலாம்.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு வீதியில் நின்று போராடுவது யாருக்காக?
போராளிகளின் மரணம் குறித்து பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று
ஜேர்மன் அதிபரிடம் மனுக் கொடுத்து போராடியிருக்கிறார்கள்.
இவர்களின் உணர்வு நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.
மற்றவர்களுக்கு முன்மாதிரி காட்டியுள்ளார்கள்.
நம்பிக்கையளிக்கிறது. ஈழத் தமிழினம் மீண்டும் தலை நிமிரும்.
பெரும் காட்டுத் தீயை மூட்டும் சிறு பொறி இது.

No comments:

Post a Comment