Wednesday, August 31, 2016

•தமிழ் குழந்தை இறைவனால் ஆசீர்வதிக்கப்படவில்லையா?

•தமிழ் குழந்தை இறைவனால் ஆசீர்வதிக்கப்படவில்லையா?
உலகில் உள்ள குழந்தைகள் எல்லாம் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவை என்கிறார்கள்.
அதனால்தான் சிரிய நாட்டுக் குழந்தை கடற்கரையில் ஒதுங்கியபோது உலகமே கண்ணீர் விட்டது.
அதனால்தான் வியட்நாம் நாட்டு குழந்தை நிர்வாணமாக ஓடிய போது அதற்கு காரணமான அமெரிக்காவை முழு உலகமும் வெறுத்தது.
அதனால்தான் காஸ்மீர் குழந்தை இறந்தபோது முழு உலகமும் அக்கறையுடன் திரும்பிப் பார்க்கிறது.
ஆனால் தமிழ் குழந்தைகள் இறந்தபோது இந்த உலகம் திரும்பிக்கூட பாhக்கவில்லையே?
அப்படியென்றால்,
தமிழ் குழந்தைகள் இறைவனால் ஆசீர்வதிக்கப்படவில்லையா?
தமிழ் குழந்தைகள் இரக்கத்திற்கு உரியவர்கள் இல்லையா?
தமிழ் குழந்தைகள் அனுதாபத்திற்குரியவர்கள் இல்லையா?
மாட்டுக்காக வருத்தப்படும் இந்திய பிரதமர்கூட தமிழ் குழந்தைகளுக்காக வருத்தப்படுவதில்லையே?
தமிழ் குழந்தைகள் மாட்டைவிட மதிப்பு குறைந்தவர்களா?
தமிழ் குழந்தை மனித இனம் இல்லையா?
குறிப்பு-
தமிழ் குழந்தை படம் தவிர மற்ற எல்லா குழந்தை படமும் போட்டு கடுப்பேத்துகிறார்கள் மைலோட்!
நீங்கதான் ஒரு நியாயம் சொல்லனும் யுவர் ஆனர்!

No comments:

Post a Comment