Wednesday, August 31, 2016

•ஜெர்மி கோபைனை ஆதரிப்பதால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது?

•ஜெர்மி கோபைனை ஆதரிப்பதால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது?
இலங்கை வரலாற்றில் சமாதானத்தை நிலைநாட்டுவேன் என்று கூறி வெற்றி பெற்று வந்த சந்திரிக்காவினால் சமாதானத்தை நிலை நாட்ட முடியவில்லை. மாறாக யுத்தத்தில் 75 வீதத்தை தானே செய்ததாக இப்போது அவர் பெருமை பேசுகின்ற அவல நிலையினைக் காண்கிறோம்..
இந்திய வரலாற்றில் "தவறான இடத்தில் இருக்கும் நல்லவர்" என்று புகழப்பட்ட வாஜ்பேய் அவர்களால் எந்த நல்லதொரு விடயத்தையும் செய்யவில்லை. மாறாக அவர் காலத்திலும் தமிழருக்கு எதிராக இலங்கை அரசுக்கு பல உதவிகள் வழங்கப்பட்டதை கண்டோம்.
அமெரிக்க வரலாற்றில் முதல் கறுப்பு ஜனாதிபதி என்ற பெருமை பெற்ற ஒபாமாவினால் தன் கறுப்பு இன மக்களைக் கொல்லப்படுவதைக்கூட தடுக்க முடியவில்லை. ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இருந்தும் அவர் தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் காக்கவில்லை.
தற்போது இங்கிலாந்தில் லேபர் கட்சியின் தலைவராக ஜெர்மி கோபைன் வருவதற்கு முழு தமிழரும் ஆதரவு வழங்க வேண்டும் என சில தமிழர்கள் கோருகின்றனர்.
அவர் பதவிக்கு வந்தால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு என்ன செய்வார் என்பதை அவரும் கூறவில்லை. அவரை ஆதரிக்குமாறு கோருவோரும் இதுவரை கூறவில்லை.
சந்திரிக்காவினால், வாஜ்பேயினால், ஒபாமாவினால் எதுவும் செய்ய முடியாமற் போனதற்கு என்ன காரணமோ அதே காரணம்தான் நாளை ஜெர்மிகோபைன் செய்ய முடியாமைக்கும் காரணமாக இருக்கப் போகிறது.
ஆம். ஆளும் வர்க்கமானது தனது நலன்களுக்கு எதிராக செயற்பட யாரையும் அனுமதிக்கப் போவதில்லை. அது ஜெர்மி கோபைனையும் விடப் போவதில்லை.
இங்கிலாந்தில் கன்சவேட்டிக் கட்சி மட்டுமல்ல லேபர் கட்சியும்கூட ஆளும் வர்க்கத்தின் நலன் பேணும் கட்சிகளே.
பிளேயர் போன்றவர்கள்; பதவிக்கு வருவதை தடுப்பதற்காக ஜெர்மி கோபைனை ஆதரிக்க வேண்டியது இடதுசாரிகளின் கடமை என்று கூறும் அளவுக்கு சிலர் வந்துள்ளனர்.
ஆனால் பிளேயர் போன்று ஜெர்மி கோபைனும் பதவிக்கு வந்த பின் மாற மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று கேட்டால் அதற்கு பதில் அளிக்க மறுக்கின்றார்கள்.
வரலாற்றில் என்றுமில்லாதவாறு இங்கிலாந்து ஆளும் வர்க்கம் அம்பலப்பட்டு நிற்கின்றது. அது மக்களின் கவனத்தை எப்படி திருப்பலாம் என்று யோசிக்கின்றது.
ஜெர்மி கோபைனுக்கு ஆதரவு என்பது ஆளும் வர்க்கத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ செய்யும் உதவியாகவே அமையப் போகின்றது.

No comments:

Post a Comment