Wednesday, August 31, 2016

•செவ்வாய்க்கு ராக்கட் விட்ட தேசத்தில் ஏழைகளுக்கு அம்புலன்ஸ் வண்டி விடமுடியாதா?

•செவ்வாய்க்கு ராக்கட் விட்ட தேசத்தில்
ஏழைகளுக்கு அம்புலன்ஸ் வண்டி விடமுடியாதா?
செவ்வாய்க்கு ராக்கட் விட்டதாக பெருமை கொள்கிறார்கள்.
2020ல் நிச்சயம் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்கிறார்கள்.
பிரதமருக்கு 2000கோடிக்கு தனி விமானம் வாங்கிறார்கள்.
ஆனால் ஏழைகளுக்கு ஒரு அம்புலன்ஸ் வண்டிகூட விட மனம் வரவில்லையே!
அம்புலன்ஸ் வண்டி இல்லை என்ற காரணத்தால்,
சில தினங்களுக்கு முன்னர் ஓரு ஏழை தன் இறந்த மனைவியின் உடலை 16 கி.மீ தோளில் சுமந்து சென்றார்.
நேற்றைய தினம் இறந்த ஒரு விதவைப் பெண்ணின் உடலை இரண்டாக முறித்து தூக்கிச் சென்றுள்ளார்கள்.
மகனின் முன்னிலையிலேயே தாயின் உடலை இவ்வாறு கொண்டு சென்றுள்ளார்கள்.
அந்த ஏழை மகனால் அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
முதலாளி அம்பானியின் மனைவிக்கு “இசட்” பிரிவு பாதுகாப்பு கொடுக்கிறார்கள்.
ஆனால் இறந்த விதவைப் பெண்ணின் உடலைக்கூட அம்புலன்ஸ் வண்டி இல்லை என்று கூறி உடலை முறித்துக் காவிச் செல்கிறார்கள்.
இலங்கைக்கு 100 அம்புலன்ஸ் வண்டிகளை அன்பளிப்பு செய்யும் இந்திய அரசு
தனது சொந்த ஏழை மக்களுக்கு அம்புலனஸ்; வண்டி இல்லை என்கிறது.
இந்தியா பணக்காரர்களுக்கு மட்டுதான் சொந்தமா?
அங்கு ஏழைகள் வாழ இடமில்லையா?

No comments:

Post a Comment