Wednesday, August 31, 2016

•இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?

•இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?
இந்திய ராணுவம் பெலட் குண்டுகளை காஸ்மீர் மக்கள் மீது பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டப்பட்ட போது
முதலில், இந்தியா ஜனநாயக நாடு. அதன் ராணுவம் அரச அனுமதி இன்றி இப்படியான தடை செய்யப்பட்ட குண்டுகளை பாவிக்க முடியாது என்றார்கள்.
அடுத்து, பெலட் குண்டால் பாதிக்கப்பட்ட காஸ்மீர் குழந்தையின் படத்தை காண்பித்தபோது அது பாலஸ்தீன் குழந்தையின் படம் என்று மறுத்தார்கள்.
தற்போது, இந்திய ராணுவமே தான் பெலட் குண்டுகளை பயன்படுத்தியதாக காஸ்மீர் உயர்நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.
அதுவும் கடந்த 32 நாட்களில் 13லட்சம் பெலட் குண்டுகள் பயன்படுத்தியதாக ராணுவம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இனி இவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்?
ஒரு ஜனநாயக நாட்டில் தன் சொந்த மக்கள் மீது தடை செய்யப்பட்ட பெலட் குண்டுகளை பயன்படுத்துவது என்ன நியாயம்?
இதற்காக இந்திய அரசுக்கும் அதன் ராணுவத்திற்கும் யார்? என்ன தண்டனை? வழங்கப் போகிறார்கள்?
இவ்வாறுதான் இலங்கை அரசும் அதன் சொந்த மக்களாகிய தமிழ் மக்கள் மீது தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை வீசியது.
இலங்கை அரசு கொத்துக் குண்டு வீசியது நிரூபிக்கப்பட்டும் இதுவரை அதற்காக இலங்கை அரசு ஜ.நா அமைப்பினால் தண்டிக்கப்படவில்லை.
அதேபோல் தற்போது இந்திய அரசும் தன் காஸ்மீர் மக்கள் மீது தடை செய்யப்பட்ட பெலட் குண்டுகளை பயன்படுத்தியுள்ளது.
ஆனால் ஜ.நா அமைப்பு வழக்கம்போல் மௌனம் காக்கிறது.

No comments:

Post a Comment