Wednesday, August 31, 2016

•நம்புங்கள் ! இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு?

•நம்புங்கள் !
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு?
இந்தியாவின் ஹரியானா மாநில சட்ட சபையில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து நிர்வாண சாமியார் 40 நிமிடம் அருளாசி வழங்கினார்.
இத்தனை காலமும் அரசியல் தலைவர்கள் சாமியார் மடங்களுக்கு சென்று அருளாசி பெற்றனர்.
தற்போது ஒரு சாமியார் சட்டசபைக்கு வந்து சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அருளாசி வழங்கிறார்.
இனி அடுத்து பாராளுமன்றம் , ஜனாதிபதி மாளிகை எல்லாம் சாமியார்கள் சென்று அருளாசி வழங்கப் போகிறார்கள்.
ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் இந்தியா மதசார்பற்ற நாடு என்றே இப்பவும் கூறுகிறார்கள்.
இதை எப்படி நம்புவது?
இந்த கொடுமையை என்னவென்பது?
குறிப்பு-
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பார்கள்.
மோடி அரசாண்டால் இன்னும் எத்தனை சாமியார்கள் வரப் போகிறார்களோ?

No comments:

Post a Comment