Thursday, August 18, 2016

•இந்தியாவின் பாதுகாப்பு ஈழத் தமிழர்களின் கையில் இருக்கிறதா?

•இந்தியாவின் பாதுகாப்பு ஈழத் தமிழர்களின் கையில் இருக்கிறதா?
கடந்த 06.08.16யன்று லண்டனில் ஈஸ்ட்காமில் மு. திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய இலங்கையில் அரசியல்யாப்பு என்னும் நூல் வெளியீடு நடைபெற்றது.
தற்போது இந்தியாவில் தங்கியிருக்கும் நூல் ஆசிரியர் மு. திருநாவுக்கரசு அவர்கள் இந் நூலை மிகவும் அவசரமாக எழுதி வெளியிட்டிருப்பதாக கூறினார்கள்.
பல பேச்சாளர்கள் பேசினார்கள். ஆனால் “ஒருபேப்பா”; ஆசிரியர் கோபி அவர்கள் தனது உரையில் “கோத்தபாயா யுத்ததத்தின் வெற்றிக்கு இந்தியாவே காரணம் என்று வெளிப்படையாக கூறிய நிலையில், அதனை இந்தியா இதுவரை மறுக்காத நிலையில், ஈழத் தமிழர்களின் கையில்தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது என்று எப்படி இநத நூல் ஆசிரியரால் எழுத முடிகிறது?” என்று கேட்டார்.
இந்தியாவில் இருக்கும் காசி அனந்தன் ஈழத் தமிழர்கள் இந்து தமிழீழம் கோர வேண்டும் என்றார்.
இந்தியாவில் இருக்கும் மு.திருநாவுக்கரசு இந்தியாவின் பாதுகாப்பு ஈழத் தமிழர்களின் கையில் இருக்கிறது என்கிறார்.
இந்தியா ஒருபுறம் எட்கா என்னும் அடிமை ஒப்பந்தத்தை செய்ய துடிக்கிறது.
இன்னொரு புறம் பாலம் கட்ட திட்டம் போடுகிறது. இலங்கையை இந்தியாவின் 30வது மாநிலமாக மாற்ற துடிக்கிறது.
இந்தியாவில் இருக்கும் இவர்கள் இந்திய ஆக்கிரமிப்பை கண்டிப்பதற்கு மாறாக இந்தியாவிற்கு ஆதரவான கருத்துகளை கூறுகிறார்கள்.
இந்தியாவில் இருந்துகொண்டு இந்திய ஆக்கிரமிப்பை கண்டித்தால்; சிறப்புமுகாமில் அடைப்பார்கள். அல்லது நாட்டை விட்டு வெளியேற்றுவார்கள் என்பது உண்மைதான்.
ஆனால் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதாயின் கொஞ்சமாவது அர்ப்பணிப்பிற்கு தயாராக இருக்க வேண்டும். அதைவிடுத்து அற்ப சலுகைகளுக்காக இந்தியாவிற்கு ஆதரவாக பேசக்கூடாது. அது இனத் துரோகம்.
நிகழ்வில் பேசிய சிலர் மு.திருநாவுக்கரசு அவர்களை “குறுமுனி” என்றார்கள். தமிழர்களின் “பொக்கிசம்” என்றார்கள்.
இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க புத்தகம் எழுதுவது வேண்டுமானால் இந்திய அரசுக்கு பொக்கிசமாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக தமிழ் இனத்தின் பொக்கிசமாக இருக்க முடியாது.

No comments:

Post a Comment