Thursday, November 30, 2017

தமிழ்சேயோன் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்
தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்சேயோன் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ்சேயோன் அவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டப்படிப்பு மாணவன்.
எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள தமிழ்சேயோன் அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
அன்பிற்கினிய தோழர்.பாலன் அவர்களுக்கு தமிழகத் தமிழர்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்...
"ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர்.தமிழரசன்" - இந்த நூல் 21 ம் நூற்றாண்டில் உலகத்தமிழர்களின் கைகளில் கிடைத்திருக்கும் சிறந்தநூல்.
இந்த நூல் தோழர்.பாலன் அவர்களின் பயணங்களுடன் துணைதின்ற தமிழ்தேசியத்தலைவரை அறிமுகம் செய்கிறது.
சாதி ஒழிப்பின் தேவையையும் அதனுடன் இணைந்த பாட்டாளி வர்க்க தலைமை ஏற்பு குறித்த பார்வையையும் விளக்குகிறது.
தமிழ்ச்சமூகத்தின் முன் நிற்கும் இந்திய ஆக்கிரமிப்பும் அதனால் ஏற்படும் சூழலியல் சார்ந்த பேராபத்தையும் உணரமுடிகின்றது.
புலவர்.கலியபெருமாள் அய்யா,தோழர்.சுந்தரம் பற்றிய அரிய குறிப்புகள்.. தோழர்..சாந்தன் அவர்களுடனான உரையாடல் எங்களை பாதிப்புக்குள்ளாக்கியது.
தோழர்.நெப்போலியன் அவர்களுடனான புரட்சிகரப் பயணத்தின் ஆவணம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக மற்றும் தமிழீழ மக்களின் போராட்ட வாழ்வியலை அறிந்துகொள்வதற்கான வரலாற்றுப்பெட்டகம் இந்நூல்.
இந்தியதுணைக்கண்டத்தில் வாழும் பிறதேசிய இனங்களின் சாதியச்சிக்கல்களுக்கான தீர்வையும் சுட்டிக்காட்டுகிறது.
புள்ளிவிவரத் தகவல்கள் பிரச்சனைகளின் ஆழத்தை மக்கள் முன் வெளிப்படுத்துகிறது.
மனமகிழ்வுடன் .. தோழர்.பாலன் அவர்களுக்கு, புரட்சிகர வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment