Thursday, November 30, 2017

•மாவீரர் வாரத்தில் இப்படியொரு கேளிக்கை விழா தேவையா?

•மாவீரர் வாரத்தில்
இப்படியொரு கேளிக்கை விழா தேவையா?
உலகெங்கும் தமிழ் மக்கள் மாண்டுபோன தம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும்வேளையில் பழையமாணவர் சங்கம் பெயரில் கேளிக்கை விழா தேவையா?
தமிழக மற்றும் சிங்கப்பூர் மலேசிய தமிழ் மக்கள்கூட இந்த காலங்களில் கேளிக்கை விழாக்களை தவிர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் லண்டனில் இருக்கும் இவ் பழைய மாணவர்கள் ஈழத் தமிழர்களாக இருந்தும் இந்த காலங்களில் கேளிக்கை விழாவை ஒழுங்கு செய்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இதுவே தாயகத்தில் யாராவது இப்படி நிகழ்வு ஒழுங்கு செய்திருப்பின் இந் நேரம் புலத்தில் இருப்பவர்கள் திட்டித் தீர்த்திருப்பார்கள்.
தாயகத்திற்கு ஓரு நியாயம். புலத்திற்கு இன்னொரு நியாயமா?
சம்பந்தப்பட்ட பழைய மாணவர் சங்கம் தயவு செய்து இதனை பரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு- பழைய மாணவர் சங்கத்தை சேர்ந்த ஒருவரே மிகுந்த வேதனையுடன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் கேட்டுக்கொண்டபடி மக்களின் கவனத்திற்காக இந்த பதிவு செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment