Thursday, November 30, 2017

பூனை கறுப்பா வெள்ளையா என்பது பிரச்சனை அல்ல

பூனை கறுப்பா வெள்ளையா என்பது பிரச்சனை அல்ல. அது எலி பிடிக்கிறதா என்பதே முக்கியம்.
அதுபோன்று எமக்கு ஆதரவு தருபவர்கள் சீமானா திருமுருகன்காந்தியா என்பது பிரச்சனை அல்ல. அவர்கள் எமக்கு ஆதரவு தருகிறார்களா என்பதே முக்கியம்.
மாவீரர் நினைவு விழாவில் திருமுருகன்காந்தி, கௌதமன் எதற்கு என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள்.
நாம் வெல்வதற்கு எமக்கு எதிரானவர்களையும் வென்றெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
இந்நிலையில் எமக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை வேண்டாம் என்று கூறுவதற்கு ஒன்றில் நாம் முட்டாள்களாக இருக்க வேண்டும் இல்லையேல் எதிரிக்கு துணை போகிறவர்களாக இருக்க வேண்டும்.
தமிழ் இனம் இனி ஒருபோதும் முட்டாள்தனமாகவும் இருக்காது. எதிரிக்கு துணை செய்யும் கருத்துகளுக்கும் இடமளிக்காது.
கோத்தபாயாவினால் பேட்டி கொடுக்க வைக்கப்பட்ட டொக்டர் வரதராசன் கடந்த வருடம் ஜ.நா வில் தமிழ் மக்களுக்கு சார்பாக சாட்சியம் அளித்தார்.
கோத்தபாயாவினால் சாட்சியாக முன்னிறுத்திய தமிழ்செல்வன் மனைவி இந்த வருடம் ஜ.நா வில் தமிழ் மக்கள் சார்பாக சாட்சியம் வழங்கினார்.
இதேபோன்று அடுத்த வருடம் யார்; சாட்சியம் அளிக்கப் போகிறார்கள் என்று இலங்கை அரசு அச்சம் கொள்கிறது.
இவையாவற்றையும் சாதிப்பது புலம்பெயர் தமிழர்களின் தொடர்ச்சியான போராட்டமே.

No comments:

Post a Comment