Thursday, November 30, 2017

•ஓ! மரணித்த வீரனே எங்களை மன்னித்துவிடு!

•ஓ! மரணித்த வீரனே
எங்களை மன்னித்துவிடு!
பிரிவு: கரும்புலி
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்:செங்கண்ணன்
இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர்
ஊர்: சாத்தூர், சிவகாசி(தமிழகம்)
வீரப்பிறப்பு: 25.01.1975
வீரச்சாவு: 11.11.1993
நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு
நீ ஈழம் வந்து போராடிய போது
நாங்கள் புலம் பெயர்ந்து லண்டன் வந்தோம்
நீ கரும்புலியாகி எமக்காக காவியமானாய்
நாங்கள் சுப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டிருந்தோம்.
நீ மரணித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது
நாங்கள் 25 அடியில் நடிகருக்கு கட்அவுட் வைக்கிறோம்
நீ பலாலி படைத்தளத்தில் ஊடுருவி வீர மரணம் அடைந்தாய்.
நாங்கள் நடிகை சன்னி லியோனுடன் டின்னர் சாப்பிடுகிறோம்
நீ எமக்காக போராடினாய். எமக்காக உன் உயிரை அர்ப்பணித்தாய்.
நாங்கள் அதை மறந்து “தமிழ்நாடு எங்களுக்கு என்ன கிழித்தது?” என்று முகநூலில் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
சிவகாசியில் பிறந்து ஈழம் வந்து போராடிய உன் பெருமை எமக்கு தெரியவில்லை.
நாங்கள் இன்னொரு நாட்டில் போராடி மறைந்த சேகுவாராவின் படம் பொறித்த ரீ சேர்ட்டை பெருமையாக போட்டு திரிகிறோம்.

No comments:

Post a Comment