Thursday, November 30, 2017

•சுமந்திரன் அட்டகாசம்!

•சுமந்திரன் அட்டகாசம்!
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கோத்தபாயா கொன்றது மிகப் பெரிய குற்றமாக தெரியவில்லை
ஆனால் கல்வி அமைசர் சர்வேஸ்வரன் சிங்கக் கொடியை ஏற்றாதது மன்னிக்க முடியாத மிகப்பெரிய குற்றமாக சுமந்திரனுக்கு தெரிகிறது.
விவாதத்திற்கு வரும்படி கோத்பாயாவுக்கு சவால் விடவேண்டியவர் சர்வேஸ்வரனுக்கு சவால் விடுகிறார்.
வர வர இந்த சுத்துமாத்து சுமந்திரன் அட்டகாசம் தாங்க முடியாமல் இருக்கிறது.
முதலில், நடந்தது இனப் படுகொலை அல்ல போர்க்குற்றம் என்றார்.
பின்னர், சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும் என்றார்.
அதன்பின்னர், இலங்கை அரசு கேட்காத நிலையிலும் அமெரிக்கா சென்று கால அவகாசம் பெற்றுக்கொடுத்தார்.
தனக்கு ஜனாதிபதி சட்டத்தரணி பதவி பெற்றார்
தனக்கு சிங்கள அதிரடிப்படை பாதுகாப்பு பெற்றார்
இன்னும் என்னென்ன பண்ணித் தொலைக்கப் போகிறாரோ?

No comments:

Post a Comment