Thursday, November 30, 2017

லண்டன் ஈஸ்ட்காம் நகரில் நடைபெற்ற நோர்வே சரவணனின் நூல் அறிமுகவிழா!

•லண்டன் ஈஸ்ட்காம் நகரில் நடைபெற்ற
நோர்வே சரவணனின் நூல் அறிமுகவிழா!
இலங்கையை பிறப்பிடமாகவும் தற்போது நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டுள்ள சரவணன் அவர்களின் இரு நூல்களின் அறிமுகவிழா லண்டனில் நேற்றைய தினம் நடைபெற்றது.
தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் பௌசர் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
“1915- கண்டிக் கலவரம்” என்னும் நூல் குறித்து எஸ.வேலு மற்றும் பி.ஏ.காதர் ஆகியோர் உரையாற்றினர்.
“அறிந்தவர்களும் அறியாதவையும்” என்னும் நூல் குறித்து மு.நித்தியானந்தன் மற்றும் பா.நடசேன் அகியோர் உரையாற்றினர்.
தேநீர் இடைவேளையின் பின்பு நோர்வேயில் இருந்து வந்திருந்த நூல் அசிரியர் சரவணன் ஏற்புரை வழங்கினார்.
சரவணன் அவர்களின் எழுத்துக்கள் விழிம்புநிலை மக்களுக்காக இருந்து வருவது பாராட்டுக்குரியது.
மழை மற்றும் வாகன நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பலர் ஆர்வமுடன் வந்து விழாவில் கலந்துகொண்டதும் பாராட்டுக்குரியதே.

No comments:

Post a Comment