Thursday, November 30, 2017

வோட்டு போட்ட மக்கள் போராடுகிறார்கள். பதவி பெற்ற தலைவர்கள் உறங்குகிறார்கள்!

•வோட்டு போட்ட மக்கள் போராடுகிறார்கள்.
பதவி பெற்ற தலைவர்கள் உறங்குகிறார்கள்!
இதோ கொட்டும் மழையிலும் நனைந்தபடி போராடுகின்றார்களே
இந்த மக்கள் அளித்த வோட்டில் பதவி பெற்ற தலைவர்கள்
தமது கையால் தமக்கு குடை பிடிப்பதில்லை.
இவர்களுக்கு குடை பிடிக்க இன்னொருவர் தேவை
இவர்கள் பயணம் செய்ய 5 கோடி ரூபாவில் சொகுசு வாகனம் தேவை.
இவர்கள் கொழும்பில் தங்குவதற்கு சொகுசு பங்களா தேவை.
வார இறுதியில் இந்திய தூதரின் விருந்தில் அருந்துவதற்கு மதுக் கிண்ணங்கள் தேவை
சிகிச்சை பெறுவது இந்தியாவில். அடிக்கடி உல்லாசம் செல்வது வெளிநாட்டிற்கு
பாராளுமன்றம் போவது கையெழுத்து போட்டு சம்பளம் வாங்குவதற்கு
பிடித்தமான பொழுதுபோக்கு பாராளுமன்றத்தில் குறட்டை விட்டு தூங்குவது
தங்களை தமிழ் மக்களின் தலைவர்கள் என்று அழைத்துக்கொள்வார்கள். ஆனால் மறந்தும் தமிழ் மக்களின் பிரச்சனை குறித்து பேச மாட்டார்கள்.
தீபாவளி விருந்தில் ஜனாதிபதியுடன் பங்கெடுப்பார்கள். ஆனால் அரசியல் கைதிகளின் பிரச்சனை என்றால் ஜனாதிபதியை சந்திக்க மாட்டார்கள் கடிதம் எழுதுவார்கள்.
பாவம் தமிழ் மக்கள்!
வோட்டு போட்டு இவர்களுக்கு பதவியைக் கொடுத்துவிட்டு அவர்கள் மழையில் நனைந்தபடி போராடுகிறார்கள்.

No comments:

Post a Comment