Monday, October 30, 2017

•யாழ் நகரில் காந்தி சிரித்தார்!

•யாழ் நகரில் காந்தி சிரித்தார்!
யாழ்நகரில் மருத்துவமனைக்கு முன்னால் உள்ள காந்தி சிலைக்கு இந்தியதூதர் நடராஜன் மாலை அணிவித்தார்.
காந்தியின் அகிம்சை சர்வதேச தினமாக கொண்டாடப்படுவது இந்தியாவுக்கு கௌரவம் என்று அவர் பேசியுள்ளார்.
யாழ் மருத்துவமனைக்கு குண்டு போட்டு பலரைக் கொன்றுவிட்டு அதே மருத்துமனை வாசலில் காந்திசிலையை வைக்க இந்திய அரசால் மட்டுமே முடியும்.
அதுமட்டுமன்றி இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவு கூர்வதை அச்சுறுத்தி தடுத்தவிட்டு காந்தி சிலைக்கு மாலை போடவும் இந்திய தூதுவரால் மட்டுமே முடியும்.
அதுகூடப் பரவாயில்லை, குற்றவாளிகளை 7 வருடத்திற்குமேல் சிறையில் அடைக்கக்கூடாது என்று காந்தி கூறியிருந்தும் சிறப்புமுகாமில் பல ஆண்டுகளாக அகதிகளை அடைத்து வைத்திருப்பதும் இதே வெட்கம் கெட்ட இந்திய அரசுதான்.
ஈழத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் 180 நாட்களுக்கு மேலாக காந்தி காட்டிய அகிம்சை வழியில் போராடுகிறார்கள். இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
இரணைதீவு மக்கள் 150 நாட்களுக்கு மேலாக தமது சொந்தநிலத்தில் குடியேற அனுமதி கேட்டு காந்தி காட்டிய அகிம்சை வழியில் போராடுகிறார்கள். இன்னும் தீர்வுகிடைக்கவில்லை.
கேப்பாப்பிலவு மக்கள் 200 நாட்களாக தமது சொந்த நிலம் கேட்டு காந்தி காட்டிய அகிம்சை வழியில் போராடுகிறார்கள். இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
காந்திக்கு மாலை போட்டு சர்வதே அகிம்சைதினம் கொண்டாடுவோர் இந்த போராடும் மக்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?

No comments:

Post a Comment