Monday, October 30, 2017

சென்னையில் இன்று (30.10.17) சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்
1 hr
நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிரசன்” நூல் சென்னையில் இன்று (30.10.17) சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்த்தேச மக்கள் கட்சியின் செயலர் தோழர் தமிழ்நேயன் அவர்கள் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
தமிழ்த்தேச மக்கள் கட்சியின் துணைத்தலைவர் தோழர் தமிழரசன் கலை அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
நூல் குறித்து தமிழ்த்தேச மக்கள் கட்சியின் அமைப்புச்செயலர் தோழர் செந்தமிழ்க்குமரன் அவர்கள் உரை ஆற்றினார்.
நூலை வெளியிட்டு வைத்த தமிழ்த்தேச விடுதலை இயக்கம் தலைவர் தோழர் தியாகு அவர்கள், நூலினை பெற்றுக்கொண்ட தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவர் தோழர் மு.களஞ்சியம் அவர்கள், தமிழர் முன்னணி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செயபிரகாசு நாராயணன் அவர்கள், தமிழ்நாடு மக்கள் கட்சி( விடுதலை) யின் தோழர் திருப்பூர் குணா அவர்கள், பொதுமையர் பரப்புரை மன்றம் தோழர் பாசுகர் அவர்கள், இயக்குனர் தோழர் வ. கீரா அவர்கள், மாணவர் கூட்டமைப்பு தோழர் செம்பியன் அவர்கள் என பல அமைப்பியல் பின்னணியில் இருந்தும் நூல் குறித்த சிறப்பு கருத்துரைகளை வழங்கினார்கள்.
நூல் அறிமுக விழாவின் நிறைவாக தமிழ்த்தேச மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் செந்தில்குமரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
விழா சிறப்பு நடைபெற ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்

No comments:

Post a Comment