Monday, October 30, 2017

செந்தூரா ! எங்களை மன்னித்து விடு!

•செந்தூரா !
எங்களை மன்னித்து விடு!
சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யுமாறு கோரிஇரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிர் துறந்தவன் நீ
நீ தலைவைத்து உயிர் விட்ட தண்டவாளத்தில்
இன்னமும் ரயில்கள் சென்றுகொண்டுதான் இருக்கின்றன.
அரசியல் கைதிகள் விடுதலைபெற்று வருவார்கள் என்று
ஒவ்வொரு ரயிலையும் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.
நாங்கள் ரயிலில் ஏற்றி பாராளுமன்றம் அனுப்பியவர்கள்
5 கோடி ரூபா சொகுசு வாகனத்தில் வந்து திரிகிறார்கள்
அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்றவர்கள்
திறப்பு தன்னிடம் இல்லை என்று கிண்டலாக கூறுகின்றார்கள்.
19 வது நாளாக 3 அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
கால் ஊனமுற்ற தந்தை ஒருவர் நடுவீதியில் உட்கார்ந்து கெஞ்சுகிறார்.
யாழ் இந்திய தூதர் வடக்கு கிழக்கில் 20 காந்தி சிலை நிறுவப்படும் என்கிறார்.
பேரறிவாளன் உயிர் காக்க உயிர் துறந்த செங்கொடிக்கு காஞ்சிபுரத்தில் நினைவு இல்லம் உண்டு.
பேரறிவாளன் தன் இல்லத்திற்கு செங்கொடி இல்லம் என பெயர் வைத்துள்ளார்.
ஆனால் ஈழத்தில் அரசியல் கைதிகள் விடுதலைக்கு உயிர் துறந்த உன்னை நாம் மறந்துவிட்டோம்.
நாம் அடுத்து வரவிருக்கும் மெர்சல் படத்திற்கு கட்அவுட் வைக்கும் அலுவலில் பிசியாக இருக்கிறோம்.
இன்னொரு விடயம், கடந்தமாதம் லண்டன் வந்த நடிகை சன்னி லியோனுடன் 10 ஆயிரம் ரூபா டிக்கட் எடுத்து டின்னர் சாப்பிட்டோம்.
மன்னித்துவிடு செந்தூரா , சுப்பர் சிங்கர் பாடகி வந்திருக்கிறார். அவர் கச்சேரிக்கு போக வேண்டும்.

No comments:

Post a Comment