Monday, October 30, 2017

•இதுதான் டிஜிட்டல் இந்தியாவா?

•இதுதான் டிஜிட்டல் இந்தியாவா?
அருணாசலப்பிரதேசத்தில் போர் விமானம் விபத்திற்குள்ளாகி 6 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
இறந்த வீரர்களது உடல்கள் வெறும் அட்டைப் பெட்டிகளால் சுற்றி அனுப்பப்பட்டுள்ளன.
கார்கில் போரில் பிணப் பெட்டி வாங்கியதில் ஊழல் செய்தவர்கள் தற்போது பெட்டியே வாங்காமல் பணத்தை அமுக்கியுள்ளனர்.
பொதுவாக இறந்த வீரர்களுக்கு ராணுவ அல்லது பொலிஸ் மரியாதை செலுத்தியே அடக்கம் செய்யப்படும்.
அவ்வாறான நிகழ்வுகளில் மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்வதும் வழக்கம்.
ஆனால் இறந்த இவ் ராணுவ வீரர் பீகாரில் அடக்கம் செய்யப்படும்போது எந்த அமைச்சரும் கலந்து கொள்ளவில்லை.
இங்கு வருத்தம் தரும் செய்தி என்னவெனில் பட்டேல் சிலை வைக்க 3000 கோடி ரூபாவை ஒதுக்கும் மோடி அரசு இறந்த வீரர்களுக்கு சவப் பெட்டி வாங்க பணம் ஒதுக்கவில்லை.
அதைவிடக் கேவலம் என்னவெனில் தனது விளம்பரத்திற்கு 1100 கோடி ரூபாவை செலவு செய்த மோடி இறந்த ராணுவ வீரர்களின் உடல்களை வைக்க பெட்டி வாங்க பணம் வழங்கவில்லையா?
இலங்கை அரசுக்கு 3000 கோடி ரூபாவில் இரண்டு போர்க் கப்பல்களை இலவசமாக வழங்கிய மோடி அரசால் ராணுவ வீரர்களுக்கு பெட்டி வாங்க பணம் ஒதுக்க முடியவில்லையா?
எல்லையில் சீன வீரர்களுக்கு இந்தி கற்றுக் கொடுக்க எடுத்த அக்கறையை பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனால் இறந்த ராணுவீரர்களுக்கு பெட்டி இருக்கிறதா என்பதில் ஏன் காட்ட முடியவில்லை?
குறிப்பு- எல்லையில் அதிகம் இறப்பது தமிழக ராணுவ வீரர்களாகவே செய்திகள் இருக்கின்றன. குஜராத் வீரர்கள் ஏன் இறப்பதில்லை? இறப்பதற்கு தமிழன். பதவியை அனுபவிப்பதற்கு குஜராத்தா?

No comments:

Post a Comment