Sunday, October 1, 2017

•ஓ மரணித்த வீரனே

•ஓ மரணித்த வீரனே
உன் புகைப்படத்தை மட்டும் எனக்கு கொடு!
ஓ , திலீபனே!
புலிகள் பயங்கரவாதிகள் என்று பாராளுமன்றத்தில் பேசினேன். அதை மறந்துவிடு.
புலிகளை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றுகூட பேட்டி கொடுத்திருந்தேன். அதையும் மறந்துவிடு.
திருமலைக்கு சுதந்திரமாக சென்றுவர மகிந்த ராஜபக்ச உதவியுள்ளார் என்று கூறினேன். அதையும் கண்டு கொள்ளாதே.
எனக்கு உனது போட்டோ மட்டும் ஒன்று கொடுத்துவிடு. அதற்கு அஞ்சலி செலுத்துவதுபோல் போஸ் கொடுக்க வேண்டும்.
தேர்தல் வந்தால் புலிகளை மாவீரர் என்று புகழ்வதும் பதவி பெற்றபின் புலிகளை பயங்கரவாதிகள் என்று நான் பேசுவதும் வழமைதானே. எனவே இதையெல்லாம் கண்டு கொள்ளாதே.
இப்படிக்கு
உனது பாசமிகு அங்கிள்
“வாழும் வீரர்” சம்பந்தன்.

No comments:

Post a Comment