Monday, October 30, 2017

புரட்சியாளர் தோழர் “சே”வும் புலுடா பேர்வழி ஈழத்து “சே” வும்

•புரட்சியாளர் தோழர் “சே”வும்
புலுடா பேர்வழி ஈழத்து “சே” வும்
இன்று புரட்சியாளர் தோழர் சே வின் நினைவு தினம் ஆகும்.
தன் வாழ்வின் இறுதிக் கணம்வரை உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஒரு உன்னதமான போராளியின் நினைவு தினம் ஆகும்.
துப்பாக்கி அவர் நெஞ்சை குறி பார்த்தபோதும் அவர் உயிருக்காக கெஞ்சவில்லை.
“நான் சாகடிக்கப்படலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்” என்று அவர் முழங்கிய வார்த்தைகள் இன்று ஈழத் தமிழருக்கு உறுதியளிக்கிறது.
அவர் தேர்தல் பாதையை முன்வைக்கவில்லை. மாறாக ஆயுதப் போராட்ட பாதையையே முன்னெடுத்தார்.
“உலகில் எங்கு அநியாயம் காணப்படுகிறதோ அங்கு கோபமும் வெறுப்பும் கொண்டு குமுறி எழுவாய் எனில் நீ என் தோழனே” என்று கூறினார் தோழர் சே.
ஆனால் ஈழத்தில் அநியாயத்திற்கு துணை போகும் மாவை சேனாதிராசாவை “ஈழத்து சே” என்று சிலர் அழைக்கின்றனர்.
வாழ்க்கையில் ஒருநாள்கூட ஆயுதம் தூக்காதவர். தொடர்ந்து தேர்தல் பாதை மூலம் பதவி சுகம் கண்டு வருபவர் இந்த மாவை சேனாதிராசா.
இவரை எப்படித்தான் கொஞ்சம்கூட கூச்சமின்றி ஈழத்து சே என்று அழைக்கிறார்களோ தெரியவில்லை.
கிடைத்த அமைச்சு பதவியை துறந்து காடுகளில் அலைந்து உயிர் விட்டவர் தோழர் சே.
ஆனால் 3 சொகுசு வீடுகள், 5 கோடி ரூபாவில் சொகுசு வாகனம் என்று பந்தாவாக திரியும் புலுடா பேர்வழி மாவை சேனாதிராசாவை எப்படித்தான் சே வுடன் ஒப்பிடுகிறார்களோ புரியவில்லை.
இதுகூடப் பரவாயில்லை. தமிழ்நாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தோழர் சே வின் வடிவில் காண்பதாக ஒரு அமைச்சர் கூறுகிறார்.
தோழர் சே வை இதைவிட வேறு யாரால் அசிங்கப்படுத்திவிட முடியும்?
ஆனாலும் நம்பிக்கை தரும் விடயம் என்னவெனில் தோழர் சே வை அழித்துவிட்டு அமெரிக்க அரசு எப்படி கனவு கண்டதோ அதேபோல் தோழர் தமிழரசனை கொன்றுவிட்டு இந்திய அரசு கனவு கண்டது.
ஆனால் தோழர் சே எப்படி உலக மக்கள் மனங்களில் இன்றும் புரட்சியாளராக வீற்றிருக்கிறாரோ அதேபோல் தமிழகத்தில் போராடும் இளைஞர்களுக்கு தோழர் தமிழரசன் விளங்குகிறார்.

No comments:

Post a Comment