Monday, October 30, 2017

9 வருடமாக தனது கணவனையும் மகனையும் தேடி தேடி

9 வருடமாக தனது கணவனையும் மகனையும் தேடி தேடி
களைத்துப்போன தாய் இன்று கண்ணை மூடிவிட்டது.
இந்த தாய் தனக்கு சொகுசு வாகனம் கேட்கவில்லை
இந்த தாய் தனக்கு சொகுசு பங்களா கேட்கவில்லை
இந்த தாய் தனக்கு இந்திய வீடு அல்லது மானியமோ கேட்கவில்லை
இந்த தாய் கேட்டதெல்லாம் தான் சாக முன்னர் ஒரு தடவையாவது
தனது கணவனையும் மகனையும் கண்ணில் காட்டும்படி மட்டுமே.
கண்ணில் காட்ட முடியவில்லை என்றால்என்ன நடந்தது என்பதையாவது
அந்த தாய்க்கு அரசு உரிய முறையில் தெரிவித்திருக்கலாம்.
ஆனால் இதைக்கூட செய்ய விருப்பம் இல்லாதவர்கள்
எப்படி இனப்பிரச்சனைக்கு தீர்வு தருவார்கள் என்று நம்புவது?

No comments:

Post a Comment