Monday, October 30, 2017

தமிழ்நாடு என்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே!

•தமிழ்நாடு என்னும் போதினிலே
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே!!
டெங்கு காய்ச்சலுக்கு ஒரு பொலிசார் உட்பட ஒரே நாளில் ஏழுபேர் இறந்துள்ளனர்.
டெங்கு காய்சலில் இறந்த பெண்ணுக்கு ஸ்டெச்சர்கூட கொடுக்க மருத்துவமனை மறுத்துள்ளது.
டெங்கு காய்ச்சலினால் இறந்த பெண்ணை கணவணும் மகனும் கையில் சுமந்து செல்லும் கொடுமை நடந்துள்ளது.
இத்தனையும் இந்தியாவில் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. முதலமைச்சரோ திருப்பதி சென்று தரிசனம் செய்கிறார்.
தான் திருப்பதியில் வணங்கியதால்தான் தமிழ்நாட்டில் மழை பெய்கிறது என்று அந்த முதலமைச்சர் அறிக்கை விடுகிறார்.
சத்திய போராட்டம் நடத்தி துணை முதலமைச்சர் பதவி பெற்றவர் நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் திறக்கிறார்.
எதிர்க்கட்சி தலைவரோ அந்த மணி மண்டபத்தில் சிவாஜி சிலையின் கீழ் தன் தந்தை கருணாநிதி பெயர் போடவில்லை என்று குரல் கொடுக்கிறார்.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய அமைச்சர் “ஆம்னி பஸ்சில் வந்து நுளம்புகள் கடிக்கிறது” என்ற அரிய கண்டுபிடிப்பை(?) கண்டு பிடித்துள்ளார்.
பொதுவாக ஒரு ஆட்சியில் ஒன்றிரண்டு மெண்டல் இருக்கக்கூடும். ஆனால் ஒரு ஒட்டுமொத்த மெண்டல்களின் ஆட்சி நடப்பதை இப்ப தான் பார்க்கிறோம்.
பாவம் தமிழக மக்கள்!

No comments:

Post a Comment