Sunday, October 1, 2017

•எல்லாம் வல்ல ஆண்டவரே இந்த பாவியையும் மன்னிப்பீராக!

•எல்லாம் வல்ல ஆண்டவரே
இந்த பாவியையும் மன்னிப்பீராக!
செய்தி- பாதர் இமானுவேல் இலங்கை சென்றார். அங்கு அமெரிக்க தூதுவரை சந்தித்து கைகுலுக்கிகொண்டார்.
வழக்கமாக கிருத்தவ மதத்தில் பாதர் பாவிகளுக்கு மன்னிப்பு வழங்குவார்
ஆனால் இங்கு ஒரு பாதர் மன்னிப்பு பெற இலங்கை சென்றுள்ளார்.
இதுவரை ஜெனிவாவில் அமெரிக்க தூதுவருடன் தேநீர் அருந்தி வந்த பாதர்,
இப்போது கொழும்பு சென்று அமெரிக்க தூதுவருடன் தேநீர் அருந்தியுள்ளார்.
இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று நீங்கள் இந்த பாதரைப் பார்த்து கேட்க நினைக்கலாம்.
ஆனால் அவர் தான் சிங்கத்தை அதன் குகையில் சென்று சந்தித்தேன் என்று வீர வசனம் பேசினால் என்ன செய்வது?
ஆனால் இங்கு எமது பிரார்த்தனை என்னவென்றால் இந்த பாதர் இப்படியே போய் மகிந்த ராஜபக்சவுக்கும் கைகுலுக்கி விடக்கூடாது என்பதே.
இறுதியாக பாதரிடம் ஒரு வேண்டுகோள் “எல்லோரிடமும் பேசிவிட்டேன். இன்னும் ஒரு மாதத்தில் தீர்வு வரப் போகிறது என்று சம்பந்தர் அய்யாவுக்கு போட்டியாக அறிக்கை விடாதீர்கள்”.
ஏனெனில் அதை தாங்கும் சக்தி தமிழ் மக்களுக்கு இல்லை!

No comments:

Post a Comment