Monday, October 30, 2017

என் இனமே என் சனமே

என் இனமே என் சனமே
நான் இறப்பதற்கு முன்
என் மகனின் முகத்தைப் பார்க்க
எனக்கு ஒரு வழியைக் காட்டு!
எமக்கு ஒரு எதிர்க்கட்சி தலைவர் இருக்கிறார்
எமக்கு ஒரு மாகாண முதலமைச்சர் இருக்கிறார்
எமக்கு ஒரு நாடு கடந்த தமிழீழ பிரதமர் இருக்கிறார்.
எமக்கு பல அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
எமக்கு 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்
எமக்கு 30 க்கு மேற்பட்ட மாகாண சபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்
இதைவிட உலகமெல்லாம் பல அமைப்புகள் இருக்கின்றன.
ஆனாலும் யுத்தம் முடிந்து 7 ஆண்டுகள் கழிந்த பின்னரும்கூட
என் மகன் விடுதலை செய்யப்படவில்லையே?

No comments:

Post a Comment