Sunday, October 1, 2017

பாவம் தமிழக மக்கள்!

பாவம் தமிழக மக்கள்!
அதிமுக வின் நிரந்தர பொதுச் செயலாளராக இறந்துபோன ஜெயா அம்மையாரே இருப்பார்கள் என அறிவித்துள்ளார்கள்.
இதுவரை ஜெயா அம்மையாரின் ஆவியுடன் பேசியதாக கூறியவர்கள் இப்போது ஆவியை பொதுச் செயலாராக்கியுள்ளார்கள்.
இதனால் உலகில் ஆவியால் ஆளப்படும் மாநிலம் என்ற பெருமையை உலகில் தமிழ்நாடு பெற்றுள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஆவி இல்லை என்று தன ;வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்த தந்தை பெரியார் படத்திற்கு முன்னால் இந்த அறிவிப்பை செய்துள்ளார்கள்.
தந்தை பெரியாரை இதைவிட வேறு யாராலும் கேவலப்படுத்தியிருக்க முடியாது.
அதுசரி, மேடையில் தந்தை பெரியார் படம் வைத்தது தற்போதைய அதிமுக (மறைமுக) தலைவர் துக்ளக் குருமூர்த்திக்கு தெரியுமா?
தந்தை பெரியாரின் படம் மேடையில் இருப்பது சங்கராச்சாரியாரின் சிஷ்யன் குருமூர்த்திக்கு கோபத்தைக் கொடுக்குமே!
பாவம் தமிழக மக்கள். இன்னும் என்னென்ன கூத்துகளை காண வேண்டி வருமோ?

No comments:

Post a Comment