Monday, October 30, 2017

•ஈழத்து “மெர்சல்”

•ஈழத்து “மெர்சல்”
இது விஜய் நடித்த படம் அல்ல
இது காப்பி அடித்து எடுத்த படம் அல்ல
இது 30 வருடத்திற்கு முன்னர் எம் மண்ணில் நடந்த கதை
இது யாழ் மருத்துவமனையில் நடந்த படுகொலைகளின் கதை
இது அமைதிப்படை என்று வந்தவர்கள் புரிந்த அக்கிரமத்தின் கதை
இது தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
இது ஜெரா தம்பியின் “ வந்தார்கள் கொன்றார்கள் சென்றார்கள்” என்னும் ஒரு ஆவணப்படம்.
இந்த ஆவணப்படம் எடுத்தால்
போட்ட பணம் திரும்ப கிடைக்காது
எந்த சர்வதேச விழாவிலும்
பாராட்டு பத்திரம் கிடைக்காது
எல்லாவற்றுக்கும் மேலாக
யாழ் இந்திய தூதர் அறிந்தால்
இனி இந்திய விசாவும் கிடைக்காது
இருந்தாலும் அத்தனையும் கடந்து
படம் எடுத்த ஜெராதம்பியின் உணர்விற்கு
பாராட்டுகள்! பாராட்டுகள்! பாராட்டுகள்!

No comments:

Post a Comment