Monday, October 30, 2017

•தமிழ் தலைவர்களால் மறக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள்

•தமிழ் தலைவர்களால் மறக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள்
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்று தமிழ் தலைவர்கள் தேர்தலில் வாக்குறுதி அளித்தார்கள்.
அவர்கள் வெற்றி பெற்றார்கள். பதவி பெற்றார்கள். சொகுசு வாகனம் மற்றும் சொகுசு மாளிகை பெற்றார்கள்.
ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.
தற்போது அநுராதபுரம் சிறைச்சாலையில் 3 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
அவர்கள் தமக்கு விடுதலை கோரி உண்ணாவிரதம் இருக்கவில்லை.
கடந்த 4 வருடங்களாக விசாரணை நடந்த வவுனியா நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற வேண்டும் என்றே கோருகிறார்கள்.
இலங்கை அரசு வேண்டுமென்றே அவர்களது வழக்கு விசாரணையை அநுராதபுரத்திற்கு மாற்றியுள்ளது.
தமிழர் தலைவர்களான சம்பந்தர் அய்யாவோ அல்லது ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரனோ விரும்பியிருந்தால் ஒரு தொலைபேசி உரையாடல் மூலம் இப் பிரச்சனையை தீர்த்திருக்க முடியும்.
ஆனால் அத் தலைவர்களோ சம்பந்தப்பட்ட உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி வந்தபின்னரும்கூட இதில் இன்னும் அக்கறை செலுத்தவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் மாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசாவையும் தவிர வேறு யாருமே அவர்களை சென்று பார்வையிடவில்லை.
ஒருவேளை இவ் அரசியல் கைதிகள் இறந்த பின்பு அதை வைத்து அரசியல் செய்யலாம் என இத் தலைவர்கள் காத்து இருக்கின்றார்களோ தெரியவில்லை.
ஆனால் இவ் அரசியல் கைதிகளின் உறவுகள் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக் கட்சி காரியாலயத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.
கனடா சென்று தனக்கு நிதி திரட்டிய தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு இந்த உறவுகளை சந்தித்து மனுவை வாங்கக்கூட அக்கறை கொள்ளவில்லை.
இது சயிக்கிள் கட்சிகாரர்களின் வேலை அல்லது கூட்டமைப்பின் மற்ற கட்சிகாரர்களின் சதி என்று மாவை சேனாதிராசா சொல்லலாம்.
ஆனால் இத்தனை வருடம் காத்திருந்து பொறுமையிழந்த நிலையில் தமிழரசுக்கட்சி காரியாலயத்திற்கு இந்த உறவுகள் வந்துள்ளனர் என்பதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவர்கள் விடுதலை கோரவில்லை. வழக்கை வவுனியா நீதிமன்றில் தொடர்ந்து நடத்தவே கோருகிறார்கள்.
இதைக்கூட அவர்களுக்கு செய்து கொடுக்க முடியாது எனில் என்ன மயிருக்கு தமிழர்களின் தலைவர்கள் என்று இவர்கள் சொல்லிக்கொண்டு திரிய வேண்டும்?

No comments:

Post a Comment