Monday, October 30, 2017

யாழ் இந்திய தூதரின் முகத்தில் ஓங்கி குத்திய தமிழ் மக்கள்!

•யாழ் இந்திய தூதரின் முகத்தில்
ஓங்கி குத்திய தமிழ் மக்கள்!
எத்தனை தடைகள்
எத்தனை மிரட்டல்கள்
எத்தனை ஆசை வார்த்தைகள்
அத்தனையும் தாண்டி தமிழ் மக்கள்
தம் உறவுகளுக்கு அஞ்சலி செய்துள்ளனர்.
தலைவர்களை விலைக்கு வாங்கலாம்- ஆனால்
தம்மை வாங்க முடியாது என்று காட்டியிருக்கிறார்கள்.
தள்ளாத வயதில் முதுகு வளையலாம்- ஆனால்
தாம் அடிமையாக வளைந்து கிடக்க முடியாது என்று
முகத்தில் ஓங்கி குத்தியிருக்கிறார்கள் எம் மக்கள்
ராணுவ தளபதியை அழைத்து வந்து
இறந்த தம் வீரர்களுக்கு அஞ்சலி செய்தார்கள்
ஆனால் தமிழ் மக்கள் தம் உறவுகளுக்கு
அஞ்சலி செய்யக்கூடாது என்று மிரட்டினார்கள்.
யாழ் மருத்துவமனை படுகொலைகளை எழுதக்கூடாது என்றார்கள்
எழுதிய விரிவுரையளரின் படிப்புக்குரிய விசாவை வழங்க மறுத்தார்கள்
பிரசுரித்த பத்திரிகை நிறுவனரை பழி வாங்கப்போவதாக மிரட்டினார்கள்
தூதுவர் தம்மை மிரட்டுவதாக அந்த எம்.பி யே பகிரங்கமாக கூறினார்.
தமிழ் மண்ணில் வந்து குந்தி இருந்துகொண்டு
தமிழ் மக்கள் அஞ்சலி செய்யக்கூடாது என்று
தம் அதிகாரத்தைக் காட்டி மிரட்டுகிறார்கள்
போர்த்துக்கேயரின் மிரட்டலுக்கு அடிபணியாத தமிழ் மக்கள்
ஒல்லாந்தரின் மிரட்டலுக்கு அடிபணியாத தமிழ் மக்கள்
ஆங்கிலேயரின் மிரட்டலுக்கு அடிபணியாத தமிழ் மக்கள்
இலங்கை அரசின் மிரட்டலுக்கு அடிபணியாத தமிழ் மக்கள்
யாழ் இந்திய தூதரின் அதிகார மிரட்டலுக்கு அடிபணிவார்களா?
தமிழ் மக்கள் இந்திய தாதருக்கு மட்டுமல்ல
இந்திய அரசுக்கும் ஒரு சேதி சொல்லியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment