Sunday, October 1, 2017

•இதுதானா சுமந்திரன் சொன்ன சம்பந்தர் அய்யாவின் சின்ன வீடு?

•இதுதானா சுமந்திரன் சொன்ன
சம்பந்தர் அய்யாவின் சின்ன வீடு?
சந்திரிக்கா காலத்தில் இருந்து சம்பந்தர் அய்யா கொழும்பில் அரசு வழங்கிய சொகுசு பங்களாவில் வாழ்ந்து வருகிறார்.
அதன்பின்னர் எதிர்கட்சி தலைவரானதும் முன்னாள் பிரதமர் ரத்னசிறீ விக்ரமநாயக்கா பயன்படுத்திய மாளிகை வழங்கப்பட்டது.
இந்த பங்களாவை திருத்துவதற்கு மட்டும் 4 கோடி ரூபா நிதி பாராளுமன்றத்தில் விசேட பிரேரணை மூலம் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் சந்திரிக்கா வழங்கிய பங்களா தனக்கு ராசியானது என்று அதனை கைவிடுவதற்கு சம்பந்தர் அய்யா மறுத்துள்ளார்.
தற்போது கொழும்பில் மட்டும் சம்பந்தர் அய்யாவுக்கு இலங்கை அரசு இரண்டு சொகுசு பங்களாக்களை வழங்கியுள்ளது.
இலங்கை வரலாற்றில் எந்தவொரு எதிர்க்கட்சி தலைவருக்கும் இவ்வாறு இரண்டு பங்களாக்கள் வழங்கப்பட்டதில்லை.
தனக்கு வழங்கப்பட்ட பங்களாக்களுக்கு திருகோணமலையில் இருந்து ஜயர்களை வரவழைத்து விசேட பூசைகளை சம்பந்தர் அய்யா செய்துள்ளார்.
அவர் எத்தனை பங்களாவில் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவர் ஒரு சிறிய அறையில் வாழ்ந்து வருவதாக சுமந்திரன் பொய் கூறினாரே. அதை எப்படி மறக்க முடியும்?
சம்பந்தர் அய்யாவின் வீட்டிற்கு செல்பவர்களுக்கு உட்காரகூட ஒரு கதிரை இல்லை. அவரது கட்டிலில் இருந்துதான் கதைக்க வேண்டியுள்ளது என்றும் சுமந்திரன் பச்சைப் பொய் கூறினாரே.
இந்த பங்களா விடயத்திலேயே இப்படி பொய் பேசும் சுமந்திரன், தீர்வு திட்ட விடயங்களில் தமிழ் மக்களுக்கு உண்மை பேசுவார் என்று எப்படி நம்ப முடியும்?

No comments:

Post a Comment