Friday, May 31, 2019

•பிரான்சில் ஒன்றுபட்டு செய்ய முடியுமென்றால்

•பிரான்சில் ஒன்றுபட்டு செய்ய முடியுமென்றால்
லண்டனில் ஏன் ஒன்றுபட்டு செய்ய முடியாது?
பிரான்சில் உள்ள தமிழ் அமைப்புகள் ஒன்றுபட்டு ஒருமித்து முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளை செய்வதாக அறிய வருகிறது.
அனைவரும் ஒருமித்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். இதுவே அனைத்து தமிழ் மக்களின் விருப்பமாகும்.
இனப்படுகொலை நடைபெற்று பத்து வருடங்களாகிவிட்டது. இம்முறை இலங்கை அரசுக்கு மட்டுமல்ல உலகிற்கும் நாம் உரத்து ஒரு செய்தியை கூறவேண்டும்.
“நீங்கள் எம்மை சாகடிக்கலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது” என்ற செய்தியே அது.
இந்த செய்தியை நாம் அனைவரும் ஒருமித்து ஒன்றுபட்டு கூற வேண்டும். லண்டன் அமைப்புகள் இதனை கவனத்தில் கொள்ளுமா?

No comments:

Post a Comment