Friday, May 31, 2019

எட்டு இடத்தில் குண்டு வெடித்ததாலதான் கலவரம் வெடித்துள்ளது என்கிறார்கள்

எட்டு இடத்தில் குண்டு வெடித்ததாலதான் கலவரம் வெடித்துள்ளது என்கிறார்கள்
சில அறிவிலிகள் செய்த வேலையால் ஒரு சமுதாயமே பலியாகிறது என்கிறார்கள்
இப்படித்தான் 1983ல் 13 இராணுவத்தினர் புலிகளால் கொல்லப்பட்டதால்;தான் கலவரம் ஏற்பட்டது என்றார்கள்.
ஆனால் அதன்பின்னர் ஆயிரக்கணக்கில் இராணுவம் புலிகளால் கொல்லப்பட்டபோது ஒருமுறைகூட கலவரம் வெடிக்கவில்லையே, அது ஏன் என்று கேட்டால் பதில் இல்லை
அப்போதும் அரசின் துணையுடனே கலவரம் நடந்தது. இப்போதும் அரசின் உதவியுடன் கலவரம் நடக்கிறது.
எப்போதும் கலவரம் அரசின் நலனுக்காகவே நடக்கிறது. அரசினாலே நடக்கிறது.
இதுவரை இரண்டு முஸ்லிம்கள் ராணுவத்தின் முன்னிலையில் கொல்லப்பட்டுள்ளனர். பல வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு சட்டத்தைப் போட்டுவிட்டு முஸ்லிம் மக்களை திட்ட மிட்டு அழிக்கின்றனர்.
இவை கலவரங்கள் அல்ல இனப் படுகொலையாகும்.
இதுவரை ஆறு பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன
இரத்த ஆறு ஓடும் என்று எச்சரித்த ஹிஸ்புல்லா இந்த முஸ்லிம்களை காப்பாற்ற வரவில்லை
ரிசாத் கூட இந்த முஸ்லிம்களை காப்பாற்ற வரவில்லை.
ஏன் ஒரு முஸ்லிம் நாடுகூட இந்த முஸ்லிம்களை காப்பாற்ற வரவில்லை.

No comments:

Post a Comment